பீரியட்ஸ் நேரத்தில் என் தோழி என்னிடம் இதை கேட்டால்.. ஆனால்.. அயலி Abi Nakshathra ஓப்பன் டாக்..

அயலி என்ற படத்தில் தமிழ் செல்வி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் அபி நட்சத்திரா. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க கேரக்டர் உள்ள வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அபி நக்சத்திரா

அபி நட்சத்திரா ஏற்கனவே மூக்குத்தி அம்மன் என்ற படத்தில், ஊர்வசியின் மகளாக, கதாநாயகன் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூக்குத்தி அம்மன் படத்தில் அபி நட்சத்திரா நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். என்றாலும், அந்த படத்தில் ஊர்வசி மகளாக நடித்ததால் பல காட்சிகளில் அவரும் கவனிக்கப்பட்டார்,

நயன்தாரா அம்மனாக நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த படத்தின் வெற்றிதான் ஆர்ஜே பாலாஜிக்கு வீட்ல விசேஷம் படம் இயக்கவும், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடிக்கவும் வாய்ப்பும் அமைந்தது.

தெய்வ நம்பிக்கையை மையப்படுத்தி

புதுக்கோட்டையை கதைக்களமாக கொண்டு தெய்வ நம்பிக்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அயலி படத்தில் நடித்த பிறகு அபி நக்சத்திரா மிகவும் பாராட்டுக்குரிய நடிகையாக, ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு நாயகியாக மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

பெண்கள் மத்தியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை. அதன்பிறகு டிவி விளம்பரங்கள் மூலமாகவும், பயன்படுத்திய மற்ற பெண்கள் கூறியதை கேட்டும் பலரும் நாப்கின் பயன்பாட்டுக்கு வந்தனர்.

டீஜ் ஏஜ் பெண்கள்

எனினும் டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் இதுபற்றிய முழுமையான விழிப்புணர்வு என்பது கடந்த 10 ஆண்டுகளுக்குள்தான் அதிகமாக வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பள்ளிகளில் பெண் ஆசிரியர்களும், வீடுகளில் தாய்மார்களும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு இதை பற்றி தெளிவுபடுத்திய நிலையில் பெண்கள், பீரியட் காலகட்டங்களில் இதை பயன்படுத்துகின்றனர்.

அயலி படத்தில் நடித்த அபி நக்சத்திரா நாப்கின் பயன்பாடு குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று வலியுறுத்தி, பேசியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

பள்ளி மாணவிகள் மத்தியில்

இதுகுறித்து பள்ளி மாணவிகள் மத்தியில் நடிகை அபிநக்‌ஷத்திராபேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அதில் அபி நக்‌ஷத்திரா பேசியதாவது, நான் அப்போ 9ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அப்போ பக்கத்துல இருந்த என்னோட கிளாஸ் பொண்ணு, எக்ஸ்ட்ரா பேடு இருக்குதாடி அப்படீன்னு கேட்டா, பேடா அப்படீன்னு கேட்டுட்டு நான் பக்கத்துல இருந்த எக்ஸாம் பேடு எடுத்துக் கொடுத்தேன்,.

பேடு அப்படீன்னு சொன்னா

அவ ஒடனே இது இல்லடீ, பேடு அப்படீன்னு சொன்னா. புரியுதா அப்ப அந்த எஜூகேசன் இல்லை. நான் எதிர்பார்க்கறது அதுதான். எல்லாருக்கும் அதை பத்தி தெரியணும், என்று பேசியிருக்கிறார் அபி நக்‌ஷத்திரா.

பீரியட்ஸ் நேரத்தில் என் தோழி என்னிடம் பேடு கேட்டாள். ஆனால் நான் தவறுதலாக புரிந்துக்கொண்டு எக்ஸாம் பேடை எடுத்து கொடுத்தேன் என அயலி பட நாயகி அபி நக்‌ஷத்திரா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.