காதலனை கரம் பிடிக்கும் பாவனி ரெட்டி.. இது எத்தனையாவது திருமணம் தெரியுமா..?

தமிழ் சினிமா நடிகைகளை பொருத்த வரை ஒருவரை திருமணம் செய்து, அவருடன் மட்டுமே வாழ்ந்து வரும் நடிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஏனெனில் கமல்ஹாசன் பாடியதை போல பல நடிகைகள், மூன்றாவது சுற்றில்தான் முழுமை காண்கின்றனர்.

அதே போல் நடிகர்களும், மனைவிகளை விவாகரத்து செய்தாலும், மறுமணம் செய்துக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் தங்களது சந்தோஷமான வாழ்க்கையை, திருமணம் செய்துக்கொள்ளாமலேயே வாழ்ந்தும் விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு மனைவியுடன் வாழ்ந்த கணவரும் குறைவு, ஒரு கணவருடன் வாழ்ந்த மனைவியும் குறைவு. இதற்கு காரணம் அவர்களது வாழ்க்கை முறையும், பொருளாதார வசதிகளும். இப்போதுள்ள பல நடிகர், நடிகையர் இதில் தெளிவாக இருக்கின்றனர்.

முரட்டு சிங்கிளாக

சிலர் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழ்கின்றனர். அல்லது லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் தாலி கட்டாமல், குடும்பம் நடத்துகின்றனர். தாம்பத்தியத்திலும் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு பிறகு, ‘நண்பர்களாக’ பிரிந்தும் விடுகின்றனர்.

பாவனி ரெட்டி

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். மிக அழகான நடிகை.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பாவனி ரெட்டி.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு அவருடைய கணவர் உயிரிழந்தார்.
தன்னுடைய நண்பர் ஒருவருடன்

அதன் பிறகு தன்னுடைய நண்பர் ஒருவருடன் லிவிங் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் நடிகை பாவனி ரெட்டி என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சி

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார் பாவனி ரெட்டி.

அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்று நுழைந்தவர் நடன இயக்குனர் அமீர். இவருடன் பாவனி ரெட்டி நெருக்கமாக பழகினார். பாவனி ரெட்டி போன்ற மிக அழகான நடிகை, மிகவும் சராசரியான தோற்றத்தில் காணப்பட்ட அமீருடன் பழகியது பிக்பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுக்கே பிடிக்கவில்லை.

இதையும் படியுங்கள்: என்ன சொல்றீங்க.. நடிகை நிவேதா பெத்துராஜ்.. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா. இருவருக்கும் இப்படி உறவா..?

பிரியங்கா தேஷ் பாண்டே

ஆனால் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக இருந்தார். அவரை தூதுவிட்டு பாவனி ரெட்டியை தன்பக்கமாக லாவகமாக மடக்கினார் அமீர்.

இவருக்கும் இடையே காதல் தூது சென்று, அமீருக்கும், பாவனிக்கும் காதல் நெருக்கத்தை அதிகப்படுத்திய அங்கிள் ஸாரி ஆண்ட்டி வேலை பார்த்தார் பிரியங்கா என்று அப்போதே சமூக வலைதளங்களில் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் பிரியங்கா.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி என ரசிகர்களும் அதைப்பற்றி பேசினார்கள்.

நெருக்கமாக உள்ள புகைப்படங்களை

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இருவரும் சில ஆண்டுகளாக ஒன்றாகவே, ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். விளம்பரங்களில் ஒன்றாக நடித்தார்கள். இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை அடிக்கடி பாவனி ரெட்டி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

இதையும் படியுங்கள்: வீட்ல நான் ஜட்டி போட மாட்டேன்.. இது தான் காரணம்.. Zee Tamil நடிகை கன்றாவி பேச்சு..

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், குரங்கு கையில் பூமாலை தான் என்றும் கடுமையாக விமர்சித்து பங்கம் செய்தனர்.

இந்நிலையில் இருவரும் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். சட்டப்படி நடிகை பாவனி ரெட்டிக்கு நடக்கக்கூடிய இரண்டாவது திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் மாதத்தில் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் பாவனி ரெட்டிக்கு இது இரண்டாவது திருமணம் என்றாலும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் இருவரும் தாலி கட்டாமலேயே குடும்ப வாழ்க்கை வாழ்ந்து விட்டனர். அப்புறம் எதுக்கு இந்த திருமணம் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.