அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..

நடிகர் அஜித்குமார், கடந்த அக்டோபர் மாதம் முதல் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார். அஜர்பைஜானில் இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்தது.

அஜித்குமார்

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஷூட்டிங் நடக்கவில்லை. இதனால் அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அப்போதே சென்னை திரும்பி விட்டனர்.

இயற்கை சீற்றங்களால் அடிக்கடி தடைபட்ட படப்பிடிப்பு, படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற தகவல்கள் பரவின.

வேட்டையனுக்கு பிறகு விடாமுயற்சி

விடாமுயற்சி படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த லைக்கா நிறுவனம், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இப்போது விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் கைவிட்டு விட்டதாகவும், அந்த படத்தை போனி கபூரின் படத்தயாரிப்பு நிறுவனம் வாங்கப் போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

அறுவை சிகிச்சை

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளையில் இருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டியும், வீக்கமும் இருந்ததால் இந்த அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது.

ஆனால் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும், இதற்காக மதுரையில் இருந்து சிறப்பு டாக்டர்கள் சென்னைக்கு வரவழைத்து அறுவை சிகிச்சை 4 மணி நேரம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷ டேட்டிங்.. காதலனுடன் ஆடுகளம் பட நடிகை திருமணம்.. யாருன்னு பாருங்க..!

இதனால் அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் கவலைப்பட்டனர். ஏற்கனவே முதுகு தண்டில் நடந்த ஆபரேசனால், பல ஆண்டுகளுக்கு முன் வரை அஜித்குமார் மிகுந்த சிரமப்பட்டு வந்தார்.

சமீபத்தில் உடல் நல பாதிப்புகளின்றி காணப்பட்ட அஜித்குமாருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததால், ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில், அஜித்குமார் வீடு திரும்பி ஒய்வெடுத்து வந்தார்.

ரசிகருடன் புகைப்படம்

இப்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் அஜித்குமார் சமீபத்தில் பைக் ரைடு செய்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவருடன் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..

அதில் அஜித்குமார் முன்பு பார்த்ததை காட்டிலும் இப்போது ஸ்லிம் ஆக அந்த புகைப்படத்தில் காணப்படுகிறார். ப்ளு கலர் ஜீன்ஸ், வெள்ளை நிற ரவுண்ட் நெக் பனியன், சிவப்பு நிற கூலிங்கிளாஸ், வெள்ளை தாடி, மீசை, தலைமுடியுடன் காணப்படுகிறார்.

முந்தைய அஜித்குமாரை போல இல்லாமல் சற்று அடையாளம் மாறியிருக்கிறார் அஜித்குமார்.

அடையாளம் தெரியாமல்…

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம் என்று ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவியதால், இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.