அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகை திவ்யா துரைசாமி தமிழ் திரை உலகில் பணியாற்றிய ஒரு அற்புத நடிகையாக விளங்குகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா துரைசாமியின் பெற்றோர்கள் துரைசாமி மற்றும் சிந்தாமணி துரைசாமி. இவர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர்.

திவ்யா துரைசாமி..

திவ்யா துரைசாமியை பொறுத்த வரை முதல் படத்தில் மாகாபாவோடு ஜோடி போட்டு நடித்த இவர் 2021-ஆம் ஆண்டு மதில் என்ற படத்தில் சன்மதி என்ற கேரக்டர் ரோல் செய்து அசத்தியவர். இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே என்ற படத்தில் கோகிலா கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை பெற்றார். அதே ஆண்டு இவர் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து இவருக்கு சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த நடிகர் என்ன மேல தூக்கி போட்டுக்கிட்டாரு..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயமானது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் அண்மை பேட்டி ஒன்றில் இவர் நடிகர் சூர்யாவோடு படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தை பலரும் ரசிக்கும் படி பகிர்ந்து இருப்பது தான். அது என்ன விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். அது பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சூர்யா பார்த்ததுமே ஹாய்மா எப்படி இருக்கிறாய் என்று பரஸ்பரமாக விசாரித்ததை பார்த்து ஆச்சரியமடைந்ததோடு நானும் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன்.

மயக்கத்தில் நடந்த விஷயம்..

இதனை அடுத்து படத்தின் சீனுக்குள் செல்லாமல் உடனடியாக போட்டோ சூட் எடுக்கப்பட்டது. அதை அடுத்து எனக்கு மனதுக்குள் திக், திக் என்று ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. அத்தோடு நான் மிகவும் பதட்டமாக இருந்தது போல உணர்ந்தேன்.

இதனை அடுத்து இப்போது தான் பார்த்தோம். அதற்குள் போட்டோ சூட்டுக்காக என்னை சூர்யா தூக்கப் போகிறாரே.. என்ற பதட்டம் ஏற்பட்டதோடு, எப்படி தூக்குவார் நான் பார்ப்பதற்கு சற்று குண்டாக கொழு கொழுவென்று இருக்கிறேனே என்பது போன்ற எண்ணங்கள் எனக்குள் ஓடியது.

எனினும் நான் நினைத்து முடிப்பதற்குள் சூர்யா என்னை அசால்ட்டாக தூக்கி தோளில் சாய்த்து கொண்டார். நான் சூர்யா தோளில் தானா இருக்கிறேன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பார்த்தேன்.

அந்த சமயத்தில் சூர்யா என்னிடம் நான் தற்போது உங்களை தோல் சுமக்கும் போது உங்களுக்கு எனது எலும்புகள் ஏதாவது குத்தினால் சொல்லவும் அல்லது நீங்கள் சரியாக ஃபீல் பண்ணவில்லை என்றால் நான் இறக்கி விடுகிறேன் என்றார்.

மேலும் வலி எடுக்கிறது என்றால் சொல்லுங்கள் நான் இறக்கி விடுகிறேன் நீங்கள் கம்போடாக இருந்தால் செய்தால் போதுமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பிரேக் எடுத்துக்கொண்டு பண்ணலாம் என்றார்.

சூர்யா கூறிய விஷயம் எனக்கு அனைத்தும் புரிந்தது. எனினும் நான் மிகவும் எக்சைட்மென்ட் ஆக இருந்ததின் காரணத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன்.

இதையும் படிங்க: அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

மேலும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா என்னை தூக்கிடுவாரா..? நான் ஓவர் வெயிட்டா இருக்கேனே என பயந்து கிட்டே இருந்தேன்.. ஆனால், அசால்டாக என்னை தூக்கி தோள் மேல போட்டுகிட்ட்டாரு.. அவர் தூக்குனதுல எனக்கு மயக்கமே வந்துடுச்சி என தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் திவ்யா துரைசாமி.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களால் அதிகளவு பேசும் பொருளாகி உள்ளது.