குடி போதையில் ஸ்ரீதிவ்யா செய்த செயல்..! பிரபலம் உடைத்த ரகசியம்..! ரசிகர்கள் ஷாக்..!

ஊதா கலர் ரிப்பன் உனக்கு யாரு அப்பன் என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான பாடலாக மாறிய பாடலில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதிவ்யா முதல் படமே அமர்க்களமாக அமைந்ததின் காரணத்தால் அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகச்சிறந்த படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வர முயற்சி செய்து வந்தார்.

குடிபோதையில் ஸ்ரீதிவ்யா..

நடிகை ஸ்ரீ திவ்யா முதல் படத்திலிருந்து முன்னணி நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு நடித்ததை அடுத்து காக்கிச்சட்டை படத்தில் அவரோடு மீண்டும் இணைந்து நடித்தார். இதனை அடுத்து விஷாலுக்கு ஜோடியாக மருது படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும் விஷ்ணு விஷாலோடு ஜோடியாக வெள்ளைக்கார துரை படத்தில் நடித்த இவர் அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி படத்திலும் ஜீவாவுக்கு ஜோடியாக சங்கிலி புங்கிலி கதவ தர போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் பென்சில் பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த ஸ்ரீ திவ்யா திரை உலகில் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன காரணம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரபலம் உடைத்த ரகசியம்..

இதனை அடுத்து அண்மையில் திரை உலகைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசும் போது அவரது நண்பர் யமுனா என்ற குறும்படம் எடுக்கும் போது அதில் நடிக்கும் கதாநாயகியை பார்க்க சென்றதாகவும் அப்போது அந்த படத்தில் நடித்த ஸ்ரீ ரம்யாவின் தங்கை தான் ஸ்ரீ திவ்யா என்று கூறினார்கள்.

இதனை அடுத்து இவரை சினிமாவில் நடிக்க அழைத்த போது அவருக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்த நிலையில் சிவகார்த்திகேயனோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரைப் பற்றி பல பத்திரிகைகள் மற்றொரு சாவித்திரி திரை உலகிற்கு கிடைத்து விட்டதாக சொன்னார்கள்.

அதனை நிரூபிக்கக் கூடிய வகையில் இவரது நடிப்பு திரை உலகில் அனைவரும் மெச்சி கொள்ளும் படி இருந்தது.
குறைந்த காலத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றிருந்த இவர் திடீரென திரையுலகை விட்டு காணாமல் போக காரணம் அவரது குடிப்பழக்கம் தான்.

ஷாக் ஆன ரசிகர்கள்..

அது மட்டுமல்லாமல் இமாம் அண்ணாச்சி வீட்டு கிரகப்பிரவேசத்தில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட இவருக்கு குறுகிய காலத்திலேயே நல்ல புகழ், பணம், பெயர் எல்லாம் கிடைத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் சுய கட்டுப்பாடு இல்லாமல் குடிக்கு அடிமையாகி விட்டார்.

மேலும் படங்களில் சிறப்பாக நடிக்க முடியாமல் ஸ்ரீ திவ்யா காணாமல் போக அந்த இடத்தை கீர்த்தி சுரேஷ் வந்து நிரப்பிவிட்டார் என்ற உண்மையை செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் தனது வளமான எதிர்காலத்தை ஶ்ரீதிவ்யா தொலைத்து விட்டார் என்று புலம்பி தவிக்கிறார்கள். மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.