நடிகையிடம் சேட்டை..! சிம்புவை விரட்டி அடித்த டி.ராஜேந்தர்..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் சிம்பு இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக குழந்தையாக இருக்கும்போது பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது தந்தையின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து குழந்தையிலே நடிப்பை பின்னி பெடல் எடுத்துவிட்டார் சிலம்பரசன் என்று பலரும் பேசி வந்தனர்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு:

சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், காளை ,சரவணா, வெண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, வாலு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த வந்தார்.

இதனிடையே சிம்பு உடல் எடை அதிகரித்து படு குண்டானதால் அவர் சினிமாவில் இருந்து பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.

அதன் பிறகு செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

தொடர் தோல்வி… பீல்டு அவுட்:

இதனையடுத்து மீண்டும் ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படமும் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் குவித்து மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த படம் சிம்புவுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.

வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரு நல்ல வசூலை கொடுத்து மீண்டும் சிம்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது.

தற்போது சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் ஆன தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

அத்துடன் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் சிம்பு முக்கிய ரோல் ஒன்றில் நடித்த வருகிறார்.

நடிகை கௌதமியிடம் சில்மிஷம்:

இந்நிலையில் நடிகர் சிம்பு குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஆன கோடங்கி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதாவது டி ராஜேந்தர் நடிகர் கௌதமி வைத்து ஒரு படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு கௌதமியுடன் தகாத முறையில் ஒரு சில்மிஷம் செய்தார். அதை பார்த்ததும் இயக்குனர் டி ராஜேந்தருக்கு மிகுந்த அவமானம் ஆகிவிட்டதாம்.

உடனே சூட்டிங் ஸ்பாட்டிலே சிம்புவை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார் டி ராஜேந்தர். சிம்பு அழுது கொண்டே வீட்டிற்கு வந்ததும் மனைவி உஷாவிடமும் இதை கூறி இருக்கிறார் TR.

விரட்டி விரட்டி அடித்த டி ராஜேந்தர்:

மனைவி உஷாவோ கடும் கோபமாக பொதுவெளியில் மகனை எப்படி இப்படி அடிக்கலாமா? நீங்கள் தானே நடிப்பதற்கு அழைக்க செல்கிறீர்கள் என கடுமையாக டி ராஜேந்திரன் திட்டி அவரை விட்டு விரட்டி விரட்டி அடித்தாராம் உஷா.

இந்த விஷயத்தை கோடங்கி கூற இது முற்றிலும் பொய்யான தகவலாக தான் இருக்கும் சிம்புவை பற்றி இப்படி தவறான செய்தியை பரப்புவதற்காக தான் இப்படி எல்லாம் பேசுகிறார்கள்.

சிம்புவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த பத்திரிகையாளர் இப்படி சொல்லி இருக்கிறார் என சிம்பு ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.