நான் இதை போட்டா கமல் சாருக்கு பிடிக்காது..! நடிகை ஒரே போடு..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை கிரண் ரதோட் இவர் ராஜஸ்தானி சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

கிரண் 2000 காலகட்டத்தில் வெளிவந்த பல வெற்றி படங்களில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை கிரண் ரதோட்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி , தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் கிரண் ரதோட். இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் , திருமலை, நியூ, திமிரு, வசூல் ,குரு சிஷ்யன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போனது.

பின்னர் சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்களில் படுக்க கவர்ச்சியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

முன்னணி நடிகையாக நட்சத்திர நடிகையாக திகழ்த்திக் கொண்டிருந்த இவருக்கு கவர்ச்சி எக்குத்தப்பாக காட்டி நடித்ததால் ஏகோபித்த ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

கவர்ச்சியை வெறுத்த மக்கள்:

ஆனால், அவருக்கு வயதாக ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கவர்ச்சி பார்த்து மக்களுக்கு வெறுத்து போக அது அவர் மார்க்கெட்டில் இல்லாமல் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார்.

பின்னர் மீண்டும் பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்த கிரண் சமூக வலைத்தளங்களில் தனது மோசமான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.

ஆம், அரை நிர்வாண உடை அணிந்து ஆபாச வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகினார்.

அது மட்டும் இல்லாமல் தனக்கென தனி ஆப் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு விதவிதமாய் காசு சம்பாதித்து வந்தார்.

குட்டையான ஆடை என்றால் அதற்கு ஒரு ரேட் மேலாடை இல்லாமல் போஸ் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு ரேட் .

பணத்திற்காக ஆபாசம்:

என இப்படி ரசிகர்கள் கேட்பதற்கு ஏற்றவாறு தன் கவர்ச்சியை காட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் ஆரம்பித்தார்.

இதில் கணிசமான வருமானத்தை பார்க்கும் கிரண் ரதோட்டிற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்றாலும் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு அவர் தற்போது வந்திருக்கிறார்.

கவர்ச்சியான நடிகையாக தமிழ் சினிமாவில் இவ்வாறு வலம் வந்துக்கொண்டிருக்கும் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் தற்போது வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் இந்த கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனிடையே அவர் சமீப நாட்களாக பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது நான் ஒன்று போட்டால் அது கமல் சாருக்கு பிடிக்கவே பிடிக்காது.

அந்த விஷயத்தை கமல் என்னிடம் அடிக்கடி சொல்லுவார் என மிகவும் வெளிப்படையாக பேசி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம் இந்த செய்திகள்.

நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் அன்பே சிவம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அதை போட்டால் கமல் சாருக்கு பிடிக்காது:

அதில் அவர் கூறியதாவது கமல் சாருக்கு நான் ஒரு விஷயத்தை போட்டால் பிடிக்கவே பிடிக்காது.

அதுதான் மேக் அப் படம் முழுதும் பாடல் காட்சிகள் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் நான் மேக்கப் போடாமல் தான் இருப்பேன்.

காட்சிக்கு தயாராகி வந்திருக்கும் போது கமல் சார் என்னை அழைப்பார். உடனே ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து என் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு முகத்தில் இருந்த அனைத்து மேக்கப்பையும் துடைத்து எடுத்து விடுவார்.

சாதாரணமாக லிப்ஸ்டிக் போட்டு இருந்தால் கூட உடனே டிஷ்யூ பேப்பரை எடுத்து மொத்தமாக துடைத்து விடுவார்.

நீங்கள் இயற்கையான அழகுடன் தான் இந்த காட்சியில் இருக்க வேண்டும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தால் காட்சியின் நிறம் மாறிவிடும்.

அதனால் நீங்கள் சாதாரணமான முகத்துடனே இருந்தால் போதும் என கூறுவார். அதனால்தான் படம் முழுக்க மேக்கப் இல்லாமல் வருவேன் என பேசி இருக்கிறார் நடிகை கிரண்.