பட வாய்ப்புக்காக அதை திறந்து காட்ட சொன்னாங்க.. நடிகை இனியா கூறிய அதிர்ச்சி தகவல்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை இனியாவின் இயற்பெயர் சுருதி சாவந்த் என்பதாகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை மாற்றிக் கொண்ட இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

நடிகை இனியா ஆரம்ப நாட்களில் பல மலையாள சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஆங்கில குறும்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

நடிகை இனியா..

அதோடு 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகு போட்டியில் கலந்து வெற்றியைப் பெற்ற இவர் 2010-ஆம் ஆண்டு பண்டகசாலை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் 2005 சைரா என்ற மலையாள படத்தில் நடித்த இவர் பண்டக சாலையை அடுத்து யுத்தம் செய் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த வாகை சூடவா திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்று தந்தது.

மேலும் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், கண் பேசும் வார்த்தைகள், நுகம், நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை தென்னிந்திய திரை உலகில் ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த மாசாணி, புலிவால், நான் கடவுள் இல்லை போன்ற படங்களில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் சினிமாவில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை ஓப்பனாக கூறியிருக்கிறார்.

பட வாய்ப்புக்காக இப்படி சொன்னாங்களா..

அந்த பேட்டியில் வாகை சூடவா திரைப்படத்திற்கு பிறகு தனக்கு சிறப்பான திரைப்படங்கள் ஏதும் அமையவில்லை என்று சொன்ன அவர் சில டைரக்டர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்பதில் சற்று வருத்தம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இவர் நடிக்க வந்த சமயத்தில் நிறத்தை காரணமாக காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது கடுமையான வேதனைக்கு உள்ளானதாகவும் மேக்கப் என்று ஒன்று இருக்கும் போது இதையெல்லாம் ஒரு காரணமாக சொல்ல வேண்டுமா? என்று யோசித்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்த நடிகை என்பதால் இவரை சில பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து இருக்கக் கூடிய விஷயத்தை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதிர்ச்சி தகவல் தந்த இனியா..

இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து இருக்கிறார்கள். மேலும் அவர் அது பற்றி பேசும் போது ஒரு அறையின் கதவை திறந்து வைத்துக் கொண்டு யாரையோ உள்ளே விட்டு அவர் எல்லை மீறி விட்டார் என்று சொன்னால் அதற்கு பொறுப்பும் நான் தான்.

எனவே கதவை திறக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவை நாம் தான் எடுக்க வேண்டும் என இலை மறைவாக வாய்ப்புக்காக அதை திறந்து காட்ட சொன்னாங்க என்று சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

ஏற்கனவே சினிமாத்துறையில் இது போன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படக் கூடிய குற்றங்கள் அதிகரித்து வந்திருக்கக் கூடிய வேளையில் நடிகை இனியாவும் இது குறித்து பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.