பேரழகில் நடிகைகளை மிஞ்சும் நதியாவின் மகள்கள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகர் ஜொலித்து வந்தவர் தான் நடிகை நதியா.

இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

1980 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகியாக பெயர் எடுத்தார் நதியா. குறிப்பாக அத்துடன் 2000 காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

நடிகை நதியா:

முதன்முதலில் தமிழில் வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே நல்ல அறிமுகத்தை இவருக்கு கொடுத்ததை தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.

ஒரு காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதில் நதியா என சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் பேமஸான நடிகையாக இருந்து வந்தார் .

புகழ் பெற்ற நடிகையான நதியா:

நதியா வளையல் , நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்களின் சைக்கிள் என நதியா எதை தொட்டு திரைப்படங்களில் நடித்தாலும் அதற்கு பெயர் நதியா என வந்துவிட்டது.

அந்த அளவுக்கு பிரபலமான நடிகையாக பெயர் பெற்றார். 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பலம் வந்து கொண்டு இருந்த நதியா.

அந்த காலத்தில் நட்சத்திர நடிகர்களான விஜயகாந்த், ரஜினி, பிரபு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பெரும் புகழ் பெற்றார்.

57 வயசிலும் குறையாத அழகு:

57 வயது ஆகியும் நதியா இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையோடு பொலிவோடு இருப்பது தான் இவரின் அழகின் ரகசியம் என பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நதியாவிற்கு இருக்கும் அழகில் பாதி நமக்கு இருந்தால் கூட போதும் என பெண்கள் கூட்டம் ஏங்கும் அளவுக்கு இதனை வயதாகியும் இளமை ததும்பும் அழகில் நதியா தென்பட்டு வருகிறார்.

இவர் மராட்டியரான ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து 1988 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆன நதியாவுக்கு சனம் , ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அதன் பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால் திரைப்படங்களில் இருந்து நடிக்காமல் இருந்த நதியா பின்னர் 2000 காலகட்டத்தில் துணை வேடங்களில் நடித்து அதன் மூலம் நட்சத்திர நடிகையாக இன்னொரு ரவுண்ட் வர துவங்கினார்.

அதன்படி ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அவரின் அம்மாவாக நடித்த பெரும் புகழ் பெற்ற நடிகையாக மீண்டும் புகழ் பெற்றார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கு குணச்சித்திரக வேதங்களில் நடித்த வருகிறார் நதியா.

அழகில் அம்மாவை மிஞ்சும் மகள்கள்:

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நதியாவின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இதில் நதியாவின் மகள்களை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்களே அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலையே என வர்ணித்துள்ளார்.

அம்மாவை பார்த்து ரசிப்பதா? மகள்களை பார்த்து ரசிப்பதா? என தெரியாத அளவுக்கு மொத்த பேரும் இம்புட்டு அழகாக இருந்தால் நாங்கள் யாரை பார்ப்பது எனது ரசிகர்கள் உருகி வழிந்த விதவிதமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரும் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடுத்தக்கது.