ஒரு பொம்பளைக்கு இது இருக்கணும்.. பெற்ற தாய் குறித்து வனிதா கூறியதை கேட்டீங்களா..?

சினிமா நடிகர் நடிகைகள் என்றாலே, அவர்களுக்கு என சில பழக்கங்கள் இருப்பது வழக்கம். ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்களை அவர்கள் தொடர்ந்து பின்பற்றும்போது, இந்த பழக்கம் அவர்களுக்கு எப்போதுமே வழக்கமாகிவிடும்.

உதாரணமாக சில நடிகர் நடிகைகள், வெளியூர்களுக்கு ஷூட்டிங் சென்றாலும் காலை நேரங்களில், வாக்கிங் செல்வது, ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.

சில நடிகர்கள், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க அதிகாலை நேரங்களில் கேமராக்களுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றுவிடுவர்.

அதுபோல் சில நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். மேக்கப் இல்லாமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.

இன்னும் சில நடிகைகள், இரவில் தூங்கிய பிறகு காலையில் வீட்டில் பெட்ரூமை விட்டு வெளியேறும் போது மேக்கப் போட்டுக் கொண்டுதான் வருவார்கள்.

ஏனென்றால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மேக்கப் இல்லை என்றால் அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம். அவர்களுக்கே கண்ணாடியில் அவர்கள் முகத்தை பார்க்கும் போது, வேறு யாரோ போல் தோன்றும் என்பதும் உண்மைதான்.

மஞ்சுளா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா விஜயகுமார் நடிகர், விஜயகுமாருக்கு இரண்டாவது மனைவி. ஏற்கனவே விஜயகுமாருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் ஒரு மகன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவுக்கு வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என்று மூன்று மகள்கள் உள்ளனர்.

நடிகை மஞ்சுளா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில், சேரன் பாண்டியன், சுயம்வரம் போன்ற சில படங்களில் தனது கணவர் விஜயகுமாருக்கு மனைவியாகவும் நடித்து இருக்கிறார்.

அழகாக காட்டிக் கொள்வார்

மஞ்சுளாவை பொறுத்தவரை சினிமாவில் எந்த மாதிரியான கேரக்டரிலும் நடித்தாலும் தன்னை மிக அழகாக காட்டிக் கொள்வார். குறிப்பாக அவரது மேக்கப் மிகவும் சிறப்பாக இருக்கும்.

வனிதா விஜயகுமார்

அது குறித்து சமீபத்தில் அவரது மகள் வனிதா விஜயகுமார் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய தாய் குறித்து பேசியிருக்கிறார்.

உதட்டில் சிகப்பு நிற சாயம்

அப்போது அவர் கூறியதாவது, என் அம்மாவிற்கு எது இருக்கிறதோ, இல்லையோ அவருடைய உதட்டில் சிகப்பு நிற உதட்டுச் சாயம் இருக்க வேண்டும். அவர் காலையில் எழுந்த உடனே எங்கே என்னுடைய லிப்ஸ்டிக் என்று தான் தேடுவார்.

லிப்ஸ்டிக் போடு

நாங்கள் யாராவது லிப்ஸ்டிக் போடாமல் இருந்தால், லிப்ஸ்டிக் போடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதில் என்ன அவருக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது என எனக்கு தெரியவில்லை.

பொம்பளை என்றால்…

அவரிடம் எப்போதுமே அடர் சிகப்பு நிற லிப்ஸ்டிக் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பொம்பளை என்றால், கண்டிப்பாக அவள் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என, அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார் என்று தன்னுடைய தாய் மஞ்சுளா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

ஒரு பொம்பளைக்கு உதட்டில் சாயம் இருக்கணும், லிப்ஸ்டிக் போடாமல் இருக்க கூடாது என, தன்னை பெற்ற தாய் மஞ்சுளா கூறியது குறித்து வனிதா கூறியிருப்பது, வைரலாகி வருகிறது.