ச்சைக்.. கன்றாவி.. குழந்தைகள் முன்னாடி பண்ற வேலையா இது..? பிரகாஷ் ராஜை விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க சில நடிகர்களால் மட்டும்தான் முடிகிறது. அவர்களே ஒரு கட்டத்தில், குணச்சித்திர நடிகராகவும் மாறி, ரசிகர்களை மனதில் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுகின்றனர்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் குணச்சித்திர நடிகராக நடிக்கும் போது அவர்கள் இந்திய அளவில் ஒரு அடையாளம் மிக்க நடிகராக கவனிக்கப்படுகின்றனர். இந்த வாய்ப்பு நாசர், ரகுவரன், கிஷோர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது.

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தனி முத்திரையை பதித்து விடுவார்.

டூயட் படத்தில் அறிமுகம்

தமிழ் சினிமாவில் டூயட் என்ற படம் மூலம் பிரகாஷ்ராஜ் அறிமுகமானார். தொடர்ந்து ஆசை, அப்பு, கில்லி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக கில்லி படத்தில் மதுரை முத்துப்பாண்டி கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இரண்டு மகள்களும், சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். இதில் மகன் சித்து இல்லை.

முதல் மனைவி லலிதா குமாரி விவாகரத்து

கடந்த 2009 ஆம் ஆண்டில் லலிதா குமாரியை பிரகாஷ் ராஜ் விவாகரத்து செய்துவிட்டு, பிரிந்தார். பிறகு நடன அமைப்பாளர் போனி வர்மாவை 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.

போனி வர்மா 2வது திருமணம்
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் கடந்த 2021ம் ஆண்டு தனது 11வது திருமண நாளை போனி வர்மாவுடன், தனது மகள்கள் மற்றும் மகன் முன்னிலையில் கொண்டாடினார். அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது திடீரென டிரெண்டாகி உள்ளன.

அந்த போட்டோக்கள் இப்போது வைரலானது மட்டுமின்றி, அவருக்கு எதிரான விமர்சனத்திலும் சிக்கி இருக்கிறது.

உதட்டோடு உதடு வைத்து முத்தம்

அதாவது ஒரு புகைப்படத்தில் தனது மகன் வேதாந்தை வைத்துக்கொண்டு தன் மனைவி போனி வர்மாவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ். அதனைப் பார்த்த சிலர், பெற்ற மகனை கண் முன்னாடி வைத்துக்கொண்டு, ஒரு தகப்பன் இப்படியா நடந்து கொள்வது என்று விமர்சனத்தை சமூக தலைவலைதளங்களில் வைத்து வருகின்றனர்.

இதில் என்ன தவறு

அதே நேரத்தில், அவருடைய மனைவிக்கு அவர் முத்தம் கொடுக்கிறார். இதில் என்ன தவறு என்றும் ஒரு தரப்பினர் விமர்சனத்திற்கு பதில் கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டது.

என்ன கன்றாவி இப்படி, குழந்தைகள் முன்னாடி பண்ற வேலையா இது என்று நடிகர் பிரகாஷ் ராஜை ரசிகர்கள் பலரும் விளாசி வருகின்றனர்.