ஏன் நீ சாணி அள்ள மாட்டியா.. கேவலமாக திட்டிய மணிவண்ணன்.. சுந்தர் சி ரியாக்சன் என்ன தெரியுமா..?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் சுந்தர் சி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது அரண்மனை 4 படத்தின் வெற்றியினால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிவண்ணன் தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது.

நீ சாணி அல்ல மாட்டியா.. கேவலமா திட்டிய மணிவண்ணன்..

தமிழ் திரை உலகில் அதிகளவு பேய் படங்கள் வெளி வரக்கூடிய சூழ்நிலையில் அரண்மனை 4 என்ற திரைப்படத்தை சுந்தர் சி இது வரை மூன்று பகுதிகள் இயக்கி இருந்தார். இதனை அடுத்து தற்போது அரண்மனை 4 வெளி வந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சுந்தர் சி தீவிரமாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து வந்த நிலையில் தற்போது அவர் மணிவண்ணன் தன்னைத் பேசியது குறித்து பேசிய பேச்சு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுந்தர் சி ஆரம்ப காலத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்த போது முதல் நாள் ஷூட்டிங் நடுரோட்டில் ஷார்ட் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்த சாணியை மணிவண்ணன் சார் என்னை சாணி அள்ள சொன்னார்.

நானும் எனக்கு கீழ் இருந்த இன்னொரு உதவி இயக்குனரிடம் சாணியை அள்ளும் படி சொன்னதை கேட்டதும் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை திட்டுவதோடு மட்டுமல்லாமல் நீ ஏன் சாணியே அள்ளல.. என மட்டமான, அசிங்கமான வார்த்தையால் திட்டி இருக்கிறார்.

நானும் ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் என்னை போய் சாணி அள்ள என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் என்னை மணிவண்ணன் சார் திட்டியதை அடுத்த தான் நான் மிகச் சிறந்த இயக்குனராக மாறி இருக்கிறேன்.

சினிமாவை பொறுத்த வரை எந்த ஒரு விஷயத்தையும் அவங்க செய்வாங்க.. இவங்க செய்வாங்க.. என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம்மால் வெற்றி அடைய முடியாது. ஒவ்வொரு செயலும் நமக்கு ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுக்கும் என பேசிய பேச்சு வைரலாகி உள்ளது

சுந்தர் சி யின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?..

இதனை அடுத்து தான் நான் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது அவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என சுந்தர் சி கூறியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் உச்ச கட்ட அந்தஸ்தில் இருக்கும் நட்சத்திரங்களை எளிமையாக இருக்கும் போது நாமெல்லாம் யார் என நினைத்தேன். 

அப்போது தான் என்னுடைய தலைக்கனம் அடங்கியது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாக கலகலப்பு மூன்று படத்தை இயக்கப் போவதாக கூறியதோடு சங்கமித்ரா, அரண்மனை 5 படங்களையும் இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கேவலமாக திட்டிய மணிவண்ணனின் பேச்சுக்கு சுந்தர் சி-யின் ரியாக்ஷன் அவரை என்று மிகச் சிறந்த முன்னணி இயக்குனராக மாற்றி விட்டது என்பதை பேசி வருகிறார்கள்.