இதுக்கு தயங்கும் நடிகர்கள் தான் விவாகரத்து பண்றாங்களாம்.. புகைச்சலில் திரையுலகம்..!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தான் தலைவிரித்து ஆட தொடங்கி உள்ளது.

குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ஜோடிகளே திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள்.

விவாகரத்தை நாடும் நட்சத்திர ஜோடிகள்:

அதுமட்டுமில்லாமல் பல வருடம் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாகவும்,எடுத்துக்காட்டான சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்பட்டு வந்த பல ஜோடிகள் இன்று பிரிந்து விவாகரத்தை நாடி இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி இவர்கள் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்று பிள்ளைகள் தோலுக்கு மேல் வளர்ந்த பிறகு தற்போது திடீரென விவாகரத்தை அணுகுகிறார்கள்.

இப்படியான விஷயம் அவர்களது குடும்பத்தாரால் மட்டும் இல்லாமல் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இது தான் நடிகர் நடிகைகளின் வாழ்க்கையா?என்ற கேள்வியும் மக்களின் மனதில் பரவலாக எழுந்து வருகிறது.

அதேபோல் தான் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகப்பிரமாண்டமாக பெரும் பொருட்சளவில் திருமணம் செய்து கொண்ட ஜோடியாக பார்க்கப்பட்டவர்கள் சமந்தா – நாகசைதன்யா ஜோடி.

இவர்கள் இருவரும் மதம் கடந்து, மொழி கடந்து திருமணம் செய்து கொண்ட ஜோடியாக பார்க்கப்பட்டனர்.

குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஜோடியாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாகவும் இருந்து வந்தனர்.

8 வருட காதல் 4 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவுகட்டிய சமந்தா:

சமந்தா – சைதன்யா யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டு தற்போது அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

இப்படி அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விவாகரத்தில் வந்து நிற்கிறது.

இப்படியான நேரத்தில் தற்போது பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் – சைந்தவியும் பிரிந்துவிட்டார்கள்.

இவர்களுக்கு அன்பு என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இப்படியான சமயத்தில் இவர்கள் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கணும் இதற்கெல்லாம் என்ன காரணம்?

நடிகர் நடிகைகளின் வாழ்க்கைக்குள் அப்படி என்னதான் நடக்கிறது என மக்கள் மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளும் வகையில் கேள்விக்கு மேல் கேள்வி எழுந்து வருகிறது.

இது போன்ற பிரபலங்களின் விளையாட்டான வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு சிக்கி சிக்கி தவிப்பது என்னவோ அவர்களின் பிள்ளைகள் தான்.

அம்மா ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம் என சென்று விடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை பின்னர் கேள்விக்குறியாகி விடுகிறது.

இந்நிலையில் இந்த ஒரு காரணத்திற்காக தான் நடிகர் நடிகைகள் பிரிந்த விவாகரத்தை செய்து கொள்கிறார்கள் என்ற ஒரு விஷயம் தற்போது செய்தியாக பரவி யோசிக்க வைத்துள்ளது.

உடலுறவுக்கு ஆசைபட்டு சீரழியும் நட்சத்திரங்கள்:

அது என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதாவது, சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல்வேறு நடிகைகள் வெளிப்படையாக பேட்டிகளில் பதிவு செய்து இருக்கிறார்கள்.

பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நேரடியாக புதிதாக நடிக்க வரும் நடிகைகள் அல்லது ஏற்கனவே நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளிடம் கூட வெளிப்படையாக கேட்கிறார்கள்.

இப்படி தங்களுடைய தேவைகளை கேட்பதும் அதற்கு சம்மதிக்கும் நடிகைகளை தங்களுடைய படங்களில் ஹீரோயின் ஆக்குவதும் சம்மதிக்காத நடிகைகளை படம் வாய்ப்பு கொடுக்காமல் வஞ்சிப்பதும் என வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனை சக நடிகைகள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், தற்பொழுது திரையுலகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு விவாகரத்துகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை என பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிடும் பொழுது ஒட்டுமொத்த சினிமா மீடியாவும் அதிர்கிறது.

இது என்ன விவகாரம் என்று கோடம்பாக்கத்தில் பேச்சுகள் எழ தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில், குறிப்பிட்ட நடிகைகள் மீது ஆசை கொள்ளும் நடிகர்கள் தங்களுடைய ஆசையை அவர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள்.

விவாகரத்து செய்ய காரணமே இதுதான்:

வெளிப்படையாக கேட்டால் பிரச்சினையாகி விடுமோ என்பதை உணர்ந்து கொண்டு காதல் என்ற பெயரில் அவர்களை அடைய முயற்சி செய்து திருமணம் வரை கொண்டு வந்து விடுகிறார்கள்.

நேரடியாக தங்களுடைய ஆசையை வெளிப்படுத்தி அதனை அங்கேயே தீர்த்துக் கொள்ள தெரியாத நடிகர்கள் தான் திருமணம் வரை சென்று அதன் பிறகு தங்களுடைய ஆசை தீர்ந்ததும் விவாகரத்து வரை வந்து நின்று விடுகிறார்கள்.

ஒரு நாளில் முடிய வேண்டிய சமாச்சாரத்தை வருட கணக்கில் இழுத்துக் கொண்டு வந்து திடீரென ஒரு நாள் முடித்து விடுகிறார்கள்.

இந்த போக்கு எப்போது மாறப்போகிறது என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.