கோபம் படிந்த முகம்.. அந்த கேள்வி கேட்டதும் திரிஷா செய்த வேலையை பாருங்க…

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரை உலகில் எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே லியோ படத்தில் விஜயோடு நடித்ததில் இருந்து திரிஷா குறித்து அப்படியும், இப்படியுமான அரசல் புரசலான கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு வெளி வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நடிகை திரிஷா..

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்றி கொடுத்திருக்கும் நடிகை திரிஷா தற்போது முன்னணி நடிகையாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்றிருப்பவர்.

இவர் லியோ படத்திற்கு பிறகு தல அஜித்தோடு இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கோல்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மலையாளத்தில் டொபினோ தாமஸ் நடிப்பில் உருவாக்கி வரும் ஐடென்டிட்டி திரைப்படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி பேசிய விஷயங்கள் பலரும் அறிந்ததே. இதனை அடுத்து திரிசா மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர்ந்தார்.

அத்தோடு கூவத்தூர் விவகாரத்திலும் திரிஷாவின் பெயர் அடிபட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க திரிஷா மாதிரி பொண்ணு என அந்த நபர் அந்தர் பல்டி அடித்தார்.

கோபம் படிந்த முகம்..

மேலும் அண்மைக் காலமாக பாடகி சுசித்ரா தரக்கூடிய பேட்டியிலும் திரிஷா குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதற்கு எதிராக இது வரை திரிஷா எந்த விதத்திலும் பதிலடி கொடுக்காத நிலையில் எப்போது கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் திரிஷா எப்போதும் பார்ட்டியில் லெஜெண்டாக இருப்பார். எந்த Dare கொடுத்தாலும் செய்து விடக்கூடிய தன்மை கொண்டவர் என்றும் அதை அடுத்து விஜய் வீட்டின் முன்பு நின்று ஆடியதும் ஒரு Dare தான் என இரண்டு நாட்களுக்கு முன்பு சுசித்ரா பகிர்ந்து இருந்தார்.

இதனை அடுத்து விஜய் வீட்டில் நடக்கும் பிரைவேட் பார்ட்டிகளில் சங்கீதா கிரிஷ் இருவரும் தான் அந்த பார்ட்டியினை ஏற்பாடு செய்வார்கள் என்று பேசியது பெரிய அதிர்ச்சியையும் கடுமையான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

கேள்வி கேட்டதும் திரிஷா செய்த வேலை..

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் விமான நிலையத்தில் நடிகை திரிஷாவை சந்திக்க இருந்த செய்தியாளர்கள் கில்லி பட ரீ ரிலீஸ் குறித்தும் அதன் வெற்றி குறித்தும் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் திரிஷா அந்த கேள்விக்கு சரியான வகையில் பதில் அளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார். அத்தோடு திரிஷா ரொம்ப கோபத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

ஆனால் இவர் கில்லி படத்தின் ரிலீஸ் குறித்து சந்தோஷமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட திரிஷா செய்தியாளர்கள் மத்தியில் ஏன் இப்படி பதில் அளிக்காமல் சென்றார் என்பது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.