சுசித்ராவின் அப்பா அம்மா எப்படி இறந்தார்கள் தெரியுமா..? கஸ்தூரி வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!

பாடகி சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு பிரபலமானதோடு திரைப்படங்களில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி பாடல்களை பாடி பட்டி தொட்டி எங்கும் கிட்டடித்த பாடல்களை பாடியவர்.

மே மாதம் 98 ல் என்ற பாடல் வரிகளை பாடிய இவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்ததோடு மங்காத்தா திரைப்படத்தில் பாடிய பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

பாடகி சுசித்ரா..

இந்நிலையில் ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் நடிகரான கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்ட இவரது ட்விட்டர் அக்கவுண்டை கணவர் தனுஷிடம் பகிர அதன் மூலம் பிராங்க் என்ற பெயரில் தனது வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளி விட்டதாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

அத்தோடு சுச்சி லீக்ஸ் மூலம் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இவர் ஒவ்வொரு பேட்டியிலும் பிரபலங்களின் முகத்திரையை கிழித்தெறிய கூடிய வண்ணம் பேசி திரை உலகை நாரடித்து வருகிறார்.

அந்த வகையில் பாடகி சுசித்ரா வரம்பு இல்லாமல் பிரபலங்களின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த சில வருடங்களுக்கு முன்பே தெரிவித்து இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ஒட்டுமொத்த திரையுலகில் இருக்கும் பல பிரபலங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளை வைத்து கிடு கிடுக்க வைத்திருக்கிறார்.

தற்போது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கவனமும் இந்த விவகாரத்தின் பக்கத்தில் திரும்பி இருக்கிறது. இப்படி எல்லாமா திரைத்துறையினர் இருக்கிறார்கள்..? என்றும்.. இவர்களையா கொண்டாடிக் கொண்டிருந்தோம் என்றும் ஒரு நிமிடம் நின்று சிந்திக்கும் அளவுக்கு சுசித்ராவின் பேச்சுக்கள் இருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க பல்வேறு பிரபலங்களும் சுசித்ராவின் இந்த புகார்கள் குறித்தும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை கஸ்தூரி சுசித்ராவின் இந்த நடவடிக்கை குறித்து பேசிய பொழுது சுசித்ராவுக்கு உடனடியாக ஒரு உதவி தேவைப்படுகிறது.

அது மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.

அப்பா அம்மா எப்படி இறந்தாங்க தெரியுமா?

அவருக்கு தன்னுடைய குறைகளை சொல்லி அதனை தீர்த்துக் கொள்ள சரியான நபர் கிடைக்கவில்லை. அது தான் சுசித்ராவின் தற்போதைய உடனடி தேவை. அவர் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்.. பல பிரபலங்களின் பெயர்களை கெடுக்கிறார்..

உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றோ… அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ.. நான் சொல்லவில்லை.

அவருக்கு அவருடைய குறைகளை சொல்லி பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கான வழியை காட்டுவதற்கு அன்பான அவருக்கு நெருக்கமான ஒரு துணை இல்லை..

இது தான் இவர் மீடியாக்களில் இப்படி பேசுவதற்கு காரணமாக இருக்கிறது. அவருக்கு உடனடியாக ஒரு துணை.. ஒரு உதவி தேவை என்று நான் கருதுகிறேன்.

சுசித்ராவின் அம்மா மற்றும் அப்பா எப்படி இருந்தார்கள் தெரியுமா..? அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

கஸ்தூரி வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..

இதிலிருந்து அவருடைய குடும்பம் அடிப்படையிலிருந்து ஏதோ ஒரு பிரச்சனையில் இருக்கிறது. பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்று இருக்கிறார்கள்.. எனும் போது அங்கு என்ன பிரச்சனை..?

அதனை எப்படி சரி செய்வது என்ற வழி காட்டுவதற்கு சுசித்ராவுக்கு ஆளில்லை என்பதால் தான் இப்படி மீடியாக்களில் வந்து வரம்பு மீறி பேசுகிறார் வரை முறை இல்லாமல் பேசுகிறார் என கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.