இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!

கடந்த சில வாரங்களாகவே இணைய பக்கங்களை மிரட்டி வரும் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்து வருவது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் பாடகி சுசித்ராவை ஒரு பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் மேலும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் என்ன இப்படி பேசி இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

பாடகி சுசித்ரா..

திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் பாடகி சுசித்ரா ஆரம்பத்தில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பிறகு திரைத்துறையில் சினிமா பாடல்களை பாடி பிரபலமானார்.

இதனை அடுத்து சுச்சி லீக்ஸ் என்ற கேப்சனோடு பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

அத்தோடு அவர் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி ஒன்றைக் கொடுக்கும் போது அதில் பயில்வான் ரங்கநாதன், தனுஷ், கார்த்திக் குமார், திரிஷா என பல பிரபலங்களை விளாசி தள்ளும் படி பேசி இருந்தார்.

மேலும் பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பற்றி சுசித்ரா பேசும் போது நான் ஹோட்டலில் ரூமில் இருந்த போது என்னை பற்றி பயில்வான் தவறான பல விஷயங்களை சொன்னார்.

பகீர் ஆடியோவை வெளியிட்ட பயில்வான்..

மேலும் இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் கொடுக்கக் கூடிய ஏஜென்ட் வேலையை பார்த்தவர். சீக்கிரமே அவர் சாக வேண்டும். அவருடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என தெரியுமா?

நடுரோட்டில் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு கதறி அழுது சாக வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பயில்வான் பேசும் போது சுஜித்ரா பைத்தியக்கார கிரிமினல் தனமாக பேசி வருவதாகவும் அவர் பேசுவதை பார்க்கும் போது ஒரு மனநோயாளி போல் உள்ளது என கூறினார்.

இதை கேளுங்க..

ஆரம்பத்தில் தவறாக பேசிய கடைசியில் உயர்த்திப் பேசக்கூடிய வகையில் இவர் பேசுவது மனநோயாளியின் பேச்சுக்கு ஒப்பாகத் தான் உள்ளது.

மேலும் சுசித்ரா என் மீது சில புகார்களை கூறி இருந்தாலும் அவருடைய நடவடிக்கை சரியாக இல்லை. கார்த்திக் குமார் அவரை எவ்வளவோ திருத்த முயற்சி செய்தும் முடியவில்லை என்றார்.

அதுமட்டுமல்லாமல் அவரைத் திருத்த முடியாத காரணத்தால் தான் கார்த்திக் குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார்.சுசித்ராவை பொறுத்த வரை அவர் மன நோயாளி தான் இப்படி கூறித்தான் ஒரு வழக்கில் இருந்தும் வெளி வந்திருக்கிறார்.

அத்துடன் விவாகரத்து செய்து கொண்ட கணவரைப் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். ஆனால் அது கூட தெரியாமல் சுசித்ரா இப்படி பேசி வருவது சட்டத்திற்கு புறம்பானது என்று தன்னை பேசிய சுசித்ராவிற்கு தக்க பதிலடி பயில்வான் தந்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. இப்படி மாறி, மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதால் என்ன லாபம்.

எனவே உண்மை நிலையை கண்டறிந்து உடனடியாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போது வைப்பார்கள் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.