பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விகாரமாக மாறிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. ரசிகர்கள் ஷாக்…!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தி , தமிழ், தெலுங்கு பெங்காளி , உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் பிரபலமான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்:

1994 ஆம் ஆண்டு உலக அழகிக்காக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாக திரைத்துறையில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக அவரது கண்ணழகு ஏராளமான ரசிகர்கள் அடிமையாக கிடந்தார்கள். பூனை கன் போன்ற அழகை பிறவிலேயே பெற்ற வித்தியாசமான அழகை பெற்றவராக தென்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள் .

குறிப்பாக இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் மூலம் அவர் பச்சன் வீட்டு மருமகளாகி மேலும் பிரபலமான நடிகையாக புகழ் பெற்றார்.

இந்திய சினிமாவில் நட்சத்திர குடும்பமான அமிதாப் பச்சன் வீட்டு மருமகளான பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு பாதுகாப்பும் அரவணைப்பும் மிக அதிகமாகவே ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம்.

காதல் தோல்விகள், கல்யாணம்:

முன்னதாக அவர் பிரபல ஹிந்தி நடிகரான சல்மான் கானை ஆதரித்து வந்தார். ஆனால் அவர் கொடுத்த காதல் டார்ச்சரால் அவரை பிரேக்கப் செய்துவிட்டு அதன் பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக சில ஆண்டுகள் விவேக் ஓபராய் நடிகருடன் சில ஆண்டுகள் காதலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழிலும் ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகிறார். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டு இருவர் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.

தொடர்ந்து ராவணன், எந்திரன், உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தற்போது 50 வயதாகும் ஐஸ்வர்யா ராய் கடைசியாக தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கேன்ஸ் திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய்:

இந்த நிலையில் 77 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் அழகு நடை போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது. அதில் அவர் பார்ப்பதற்கு முகம் அடையாளமே தெரியாத அளவுக்கு கண்ணம் எல்லாம் வீங்கி வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததை ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

கலாய்த்த கஸ்தூரி:

இதையடுத்து ஐஸ்வர்யா ராயின் இந்த புகைப்படத்தை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான கஸ்தூரி,

உலகின் மிக அழகான பெண்களைக் கூட காலம் விட்டுவைப்பதில்லை…. ஐஸ்வர்யா எந்த ஒப்பனை நடைமுறைகளையும் மேற்கொள்ளவில்லை என்றாலும், அவர் தனது சுருக்கங்களை மென்மையாக்க போடோக்ஸ் ஊசிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர் இயற்கையாகவே அழகாக இருந்திருப்பார். ஆனால், பிளாஸ்டிக் அவளது காலத்தால் அழியாத அழகை அழித்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்ஸ் பலரும் தங்களது கருவித்துக்களையும் கூறி வருகின்றனர்.