நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

சமீபகாலமாக  சமூக வலைதளங்களிலும் தமிழ் சினிமாவிலும் அதிக பேசு பொருளாகி வரும் ஒரு விஷயமாக பாடகி சுச்சித்ரா கொடுக்கும் பேட்டிகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே இவர் பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார்.

அதில் தனுஷ் ஆண்ட்ரியா மாதிரியான முக்கிய பிரபலங்கள் பலரது பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து பாடகி சுச்சித்ராவிற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன.

சுச்சி லீக்ஸ்:

அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் சுச்சித்ரா. அதற்குப் பிறகு அவர் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசுவதற்காக வந்த சுச்சித்ரா மீண்டும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசியிருந்தார்.

அந்த வீடியோக்கள் மீண்டும் வைரலாக துவங்கியிருந்தன. அப்பொழுது பேசிய அவர் தன்னுடைய கணவர் கார்த்திக் குமாருக்கும் நடிகர் தனுஷிற்கும் இடையே உறவு இருப்பதாக பேசியிருந்தார். அந்த விஷயம் திரைத்துறையை பெரிதாக அதிர்ச்சி அடைய வைக்கும் ஒரு செய்தியாக அமைந்திருந்தது.

ஆனால் அதற்கு பதில் அளித்த கார்த்திக் குமார் இவ்வாறெல்லாம் என்னை பேசுவதால் நான் கவலைப்பட போவதில்லை என்று கூறி இருந்தார். கார்த்திக் குமார் பாடகி சுச்சித்ராவை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

பார்ட்டியில் நடந்த கொடுமை:

அவர் அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்வது பிடிக்காமல்தான் சுச்சித்ரா தொடர்ந்து அவரைக் குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் பேட்டியில் பேசிய சுச்சித்ரா கூறும் பொழுது தென்னிந்திய திரைப்பட இரவு விருந்து ஒன்றிற்கு என்னை அழைத்துச் சென்று தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்கினார் என்னுடைய கணவர் என்று கார்த்திக் குமார் குறித்து வெளிப்படையாக குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் சுச்சித்ரா.

பொதுவாகவே பிரபலங்கள் ஈடுபடும் இரவு விருந்துகளில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்கும் என்பது  மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் சுச்சித்ரா கூறும் பொழுது அது உண்மையிலேயே அப்படி தான் நடக்கிறதோ என்று ஐயம் கொள்ளும் வகையில் இருக்கிறது.

அந்த இரவு விருந்தில் பிரபலங்கள் பலர் சேர்ந்து தன்னை பிராங் செய்ததாகவும் அதை தனது கணவர் கார்த்திக் குமார் கேட்காமல் இருந்ததாகவும் சுச்சித்ரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதனை அடுத்து இந்த விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.