இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை.. பிரிந்து சென்ற குடும்பம்.. பிரபல நடிகர் பேச்சு..!

தனது துரு, துரு பார்வையாலும் சுட்டித்தனமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கட்டி போட்ட வடநாட்டைச் சேர்ந்த நடிகை ஜோதிகா தல அஜித்தின் வாலி திரைப்படத்தில் சின்ன கேரக்டரை செய்து அசத்தியவர்.

இதை அடுத்து இவருக்கு தமிழில் அதிக அளவு நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தளபதியோடு இணைந்து குஷி படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை ஜோதிகா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் முன்னணி நாயகியாக உலா வந்த காலத்தில் காக்க காக்க திரைப்படத்தில் வாரிசு நடிகரான சூர்யாவோடு இணைந்து நடித்தார்.

இந்தப் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடைசியில் பெற்றோர்களின் சமூகத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் ஒதுங்கி இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு ரீஎன்றி கொடுத்தார். இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்கள் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்த வருகிறார்.

ஜோதிகாவின் நடத்தை சரியில்லை..

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களுக்கு குறித்து அடிக்கடி சர்ச்சை மிகு கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து சில விஷயங்களை பேசி இருப்பது இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இவர் பேசும் போது அண்மையில் நடை பெற்ற தேர்தலில் தளபதி விஜய் ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்திருந்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அவர் ரஷ்யாவில் இருந்து துபாய்க்கு வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்து தன்னுடைய கடமையை ஜனநாயகிய முறையில் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டார்.

பிரபல நடிகர் பேச்சு..

ஆனால் பெரும்பாலான நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஓட்டு போட்ட நிலையில் பிரபல வாரிசு நடிகரான சூர்யாவின் மனைவி ஜோதிகா தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய தவறிவிட்டார்.

எதற்கு காரணம் என்ன என பத்திரிகையாளர்கள் பலரும் இது பற்றி நடிகர் சிவகுமாரிடம் கேட்ட போது மகன் மட்டும் தான் மும்பையில் இருந்து வந்திருக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை என்று பதில் அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து ஜனநாயக கடமையை சரி வர செய்யாத ஜோதிகா, தஞ்சாவூர் கோயில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்ல கூடிய தகுதி உள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து முதலில் ஒரு இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். அதனை அடுத்து தான் ஒவ்வொரு பிரஜைக்கும் எது தேவையோ அதை நாம் பேச வேண்டும். ஆனால் ஜோதிகா அந்த விஷயத்தில் அப்படி இல்லை அவர் இந்த விஷயத்தில் சரியான நடத்தையை பின்பற்றவில்லை.

மேலும் ஒரு குடும்பத்தில் மாமனார் மாமியாருக்கு அடங்கி இருக்க வேண்டும் கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்க வேண்டும் இதையெல்லாம் ஜோதிகா மறந்து விட்டார் என பயில்வான் ரங்கநாதர் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைவலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.