ஒரு நாள் இரவில் இது நடந்துச்சு.. மிரண்டு போயிட்டேன்.. பயம் அதிகமாச்சு.. அதுல்யா ரவி ஷாக்..!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த நடிகை அதுல்யா ரவி இளங்கலை தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பினை சென்னையில் இருக்கும் திரு ராமசாமி நினைவு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்.

2017-ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானதை அடுத்து பல்வேறு திரை துறை வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி முதன் முதலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் இந்த படம் வெளியாவதற்கு தாமதமானதை அடுத்து காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

வசூல் ரீதியாக மிகப்பெரிய அடியை சந்தித்தது இந்த படம். எனினும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற இணையதளம் இந்த படம் குறித்த தகவல்களை சிறப்பான முறையில் வெளியிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் அதுல்யா ரவி 2018 – ஆம் ஆண்டு ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் துரை இயக்க சமுத்திரக்கனி, பாலா சரவணன் போன்ற முக்கிய நடிகைகள் நடித்திருந்தார்கள்.

அத்துடன் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சைப் பெற்ற அதுல்யா ரவி 2019 – ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடி திரைப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக புவனா கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இவர் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்ததை அடுத்து அடுத்த சாட்டை, கடாவர், வட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஒரு நாள் இரவில் இது நடந்தது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடியவர் அடிக்கடி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்.

மேலும் இவர் நடிக்க வந்த புதிதில் நடந்த சுவாரசியமான விஷயத்தைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரே நாள் இரவில் இது நடந்துச்சு. நான் மிரண்டு போய்விட்டேன். இதனால் எனக்கு பயமும் அதிகமாச்சு என்ற ஷாக்கிங் தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அப்படி என்ன ஒரு நாள் இரவில் நடந்தது என்று நீங்கள் சிந்திக்கலாம். அது வேறு எதுவும் இல்லை இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நாள் இரவில்  2,00,000 Follower-கள் உருவானார்கள். 

மேலும் இரவு தூங்கும் போது வெறும் 600 ஃபாலோவர்கள் தான் இருந்தார்கள். ஆனால் மீம்கள், புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்ததும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

ஷாக்கிங் செய்தி..

இந்த நிலையில் நான் காலையில் எழுந்து பார்த்தால் இரண்டு லட்சம் ஃபாலோவர்கள் இருந்தார்கள். இதை பார்த்து நிஜமாகவே இது நம்ம அக்கவுண்ட் தானா..? என மிரண்டு போயிட்டேன்.. இந்த காரணத்தால் எனக்கு பயம் அதிகமாகிடுச்சு..

மேலும் அந்த சூழ்நிலை மகிழ்ச்சியாக இருந்தது என்றாலும் பயமும் கூடவே இருந்தது என பேசியுள்ளார் அதுல்யா ரவி. இதனை அடுத்து இந்த விஷயமானது இணையதளத்தில் காட்டு தீ போட பரவி வருகிறது.

இந்த விஷயத்தை பற்றி தெரியாத அவர்கள் நண்பர்களுக்கு இந்த விஷயத்தை ஷேர் செய்து வருவதால் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறியிருப்பதோடு அதுல்யா ரவியின் ஷாக்கிங் செய்தி இது தானா என்று பேச வைத்து விட்டது.