10வது படிக்கும் போதே எனக்கு அது நடந்துச்சு.. தன் வாயாலேயே கூறிய கேப்ரில்லா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய ஹீரோயின் என்று பிரபலமானவள் தான் கேப்ரில்லா.

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முதன் முதலில் தனது நடன திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

கேப்ரில்லா சார்ல்டன்:

முதன் முதலில் தனுஷ் நடிப்பில் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .

3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்து.

சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார் ,இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தன சமூக வலைதளங்கள் முழுக்க கவர்ச்சியான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசனங்களின் கவனத்தையும் ஈர்த்தவராக பார்க்கப்பட்டார்.

கவர்ச்சிக்கு கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பு:

விதவிதமான மாடல் உடைகளை அணிந்து கொண்டு லேட்டஸ்ட் போட்டோக்களை எடுத்து புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருந்தது.

இப்படியாக கேபிரில்லா தமிழ் மக்கள் இடையே பிரபலமானவராக பார்க்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடாளராக கலந்து கொண்ட பிறகு அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்திருந்தார் . அந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக லட்சணமான மனைவியாக சேலை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது மிக மோசமான அனுபவத்தை வாழ்க்கையில் எதிர் கொண்டதாக கூறி இருக்கிறார் .

10வது படிக்கும்போதே அப்படி பண்ணிட்டாங்க:

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டியில் கேபிரில்லா 10ம் வகுப்பு படிக்கும்போதே மோசமான சர்ச்சையில் சிக்கியதைப் பற்றி பேசியிருந்தார்.

அதாவது, பள்ளியில் படிக்கும் போதே என்னுடைய புகைப்படத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்து டீப் பேக் புகைப்படத்தை வெளியிட்டனர்.

இது சமூக வலைதளங்கள் முழுக்க வெளியாக என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது. பள்ளியில் இருந்த தோழிகள் சக நண்பர்கள் எல்லோரும் ஒரு மாதிரி மிகவும் அசிங்கமாக பார்த்தார்கள் .

அந்த சமயத்தில் நான் ஆடையே போடாமல் நிர்வாணமாக இருப்பது போல் நான் உணர்ந்தேன். அந்த அளவுக்கு அவர்களது பார்வை என்னை கொன்றது.

அந்த பிரச்சனைக்கு பிறகு எப்பேர்ப்பட்ட பிரச்சனை, சர்ச்சைகள் , கேலி , விமர்சனம் என எது வந்தாலும் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்ததே கிடையாது.

அந்த ஒரு விஷயம் என்னை அந்த அளவுக்கு மனதளவில் பாதித்துவிட்டது என கேப்ரில்லா கூறியிருந்தார்.
இந்த விஷயத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நான் பள்ளிக்கு செல்லவில்லை.

விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்:

அதன் பிறகு என்னுடைய ஆசிரியர்கள் என்னை மனதளவில் தேற்றி கவுன்சிலிங் கொடுத்து என்னை மீண்டும் பள்ளிக்கு அழைத்தார்கள் என கேப்ரில்லா கூறி இருக்கிறார்.

இது குறித்து பேசிய பயில்வான் , இதை அவர் வெளிப்படையாக கூறாமல் இருந்திருக்கலாம். சும்மா ஒரு விஷயத்தை சொன்னாலே மிகப்பெரிய அளவில் கதை கட்டி விடுவார்கள்.

இவ்வளவு பெரிய விஷயத்தை ஓப்பன் ஆக கூடியிருப்பதால் அவர் மிகவும் மோசமாக விமர்சிக்க வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.