அப்பா நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து மகன் நடிகருக்கு ஹீரோயின் ஆன ராசியான நடிகை..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே அட்ஜஸ்ட்மென்ட்க்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம். எல்லா காலங்களிலும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு நடிகைகள் தொடர்ந்து போராட வேண்டி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் தான் மிகவும் பேசுபொருளாகி வருகிறது.

தன்னுடைய பெயரிலேயே வெற்றியைக் கொண்டவர் இந்த நடிகர். இதுவரை இவர் தமிழில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பொதுவாக தமிழில் 100 திரைப்படங்களில் நடித்து விட்டாலே அவர்கள் பெரிய பிரபலங்கள் என்று தான் கூற வேண்டும்.

அப்படி இருக்கும் பொழுது 300 படங்கள் நடித்த அவர் எப்படிப்பட்ட பிரபலமாக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். 300 படங்கள் நடித்த பிறகு கூட திரைத்துறையில் இப்பொழுதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராகதான் இவர் இருந்து வருகிறார்.

பஞ்சாயத்து நடிகர்:

பொதுவாகவே சினிமாவில் பஞ்சாயத்து என்றாலே இவரது முகம் தான் ஞாபகத்துக்கு வரும் அப்படி திரைத்துறைக்கும் பஞ்சாயத்துக்கும் இவருக்கும் இடையே அதிக தொடர்புகள் உண்டு.

திரைத்துறையில் அதிகமாக பஞ்சாயத்து செய்யும் இவர் தன்னுடைய வீட்டிலும் அதையே செய்து வருவதாக கூறப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் கூட அதிக நெருக்கடிக்கு நடுவில்தான் இவர் வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் மனைவி உயிருடன் இருக்கும் பொழுதே இன்னொரு நடிகையின் மீது ஆசை கொண்டுள்ளார்.

பிறகு அந்த நடிகையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அப்படி இரண்டாவதாக திருமணமான நடிகைக்கு பிறந்த மகள்களுடனும் இவருக்கு பஞ்சாயத்து இருந்து வருகிறது. அந்த மகள்களுக்கும் இவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

வாய்ப்புக்காக இடம் கொடுத்த இடம் கொடுத்த நடிகை:

இந்த நிலையில் இனி எந்தவித பஞ்சாயத்தும் வேண்டாம் என்று பெரிதாக எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறாராம் இந்த பஞ்சாயத்து நடிகர்.

இதற்கு நடுவே தற்சமயம் மீண்டும் இளம் நடிகையுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகையை இவருடைய மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக இவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளவும் தயார் என்று கூறிய நிலையில் அதற்கு அந்த பஞ்சாயத்து நடிகரும் சம்மதம் தெரிவிக்க இதுவருக்குள்ளும் உறவு வளர்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தற்சமயம் பொதுவெளிக்கு வந்து கொஞ்சம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல சினிமா பத்திரிகையாளரான வித்தகன் சேகர் சமீபத்தில் தனது யூட்யூப் வீடியோ ஒன்றில் இந்த தகவல்களை பகிர்ந்து இருந்த நிலையில் இன்னும் அதிகம் பேசு பொருளாகி வருகிறது இந்த விவகாரம்.