தாலியை போட்டுக்கிட்டு தப்பு பண்ணக்கூடாது.. ஓவர் போதை.. வாழ்கையை தொலைத்த தொகுப்பாளினி..!

இன்று உலகம் முழுவதுமே விவாகரத்துக்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் கூடாத நட்பும் தேவையில்லாத போதை வஸ்துக்களை பயன்படுத்துவது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் கூடாத நட்பு மூலமும் ஓவர் போதையால் தன் வாழ்க்கையை இழந்த விஷயம் பற்றி பார்க்கலாம்.

இன்று சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் நட்சத்திர தம்பதிகள் அதிகளவு இருக்கிறார்கள்.

இதில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் சரி பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் விரைவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்துக்கள் நடக்கிறது.

தாலிய போட்டுக்கிட்டு தப்பு பண்ண கூடாது..

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் பொது உலகில் என விவாகரத்து செய்திகள் அன்றாடம் வெளிவந்து காதை கிளிக்கின்றன. இதற்கு என்ன காரணம். ஏன் நிறைய தம்பதிகள் விவாகரத்து பண்ணுகிறார்கள் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் யாரும் செல்ல தேவையில்லை.

ஏனென்றால் இது இரண்டு தனிப்பட்ட மனங்களுக்கு இடையே நடக்கக்கூடிய போராட்டம். அதில் ஆராய்ச்சி செய்ய எதுவும் கிடையாது.

அவர்களுக்குள் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வது தான் நல்லது. பிடிக்காத ஒருவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நெருக்கடி இல்லை.

அத்துடன் அவசியம் எதுவும் இல்லை என்பது தான் பெருவாரியான மக்களின் குரலாக இருக்கிறது.

எனவே இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய தேவையில்லை. ஆனால் சின்ன திரை மற்றும் வெள்ளி திரையில் தங்களுக்கு இருக்கக் கூடிய தீய பழக்கங்கள் காரணமாக தன்னுடைய திருமண வாழ்க்கையை தொலைத்துக் கொண்ட ஒரு தொகுப்பாளினியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஓவர் போதையில்..

பிரபல தொகுப்பாளினி இவர் தன்னுடைய பள்ளி பருவ காலத்திலிருந்து சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கி தொகுப்பாளினியாக பயணித்துக் கொண்டிருந்தார்.

தன்னுடைய நண்பர் ஒருவரையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பிரபல நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கம் அதன் மூலம் தொற்றிக்கொண்ட போதைப் பழக்கம் இவற்றை விட முடியாமல் தவித்து வந்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் இது தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. இதில் உச்சகட்டமாக தாலியை போட்டுக்கிட்டு இப்படியான தப்புகளை செய்யக்கூடாது என்பதால் தாலியை கழட்டி வீட்டிலேயே வைத்து விட்டு சென்றிருக்கிறார் அம்மணி.

வாழ்க்கையை தொலைத்த தொகுப்பாளினி..

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட கணவர் பல முறை கண்டித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய போதை பழக்கத்தையும் பிரபல நடிகர்களுடன் போக்குவரத்தையும் தவிர்க்க முடியாத நிலையில் இருந்த தொகுப்பாளினியும் ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்தே வந்திருக்கிறார்.

அதன் பிறகு, தற்போது வரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய சுதந்திர வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம் அம்மணி.

ஆனால், எப்படியாவது இவரை பிடித்து ஒரு கால் கட்டு போட்டு விட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் தவித்து வருவதாக விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மக்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.