ஹே.. டாமி எழுந்திரு.. என்ன தொங்கிருச்சு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

கதாநாயகிகளுக்கான போட்டிகளைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமாவில் அது மிக அதிகம் என்று கூறலாம் ஏனெனில் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள்தான் அதிகபட்சம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள்.

ஆனால் பாலிவுட்டை பொறுத்தவரை அங்கு மாடலிங் துறை கொஞ்சம் பெரிய மார்க்கெட்டாக இருப்பதால் அங்கு சினிமா நடிகை ஆவதற்கான பெண்களின் வரிசையும் பெரிசாக இருக்கிறது. இதனாலேயே நிறைய வட இந்திய பெண்கள் தென்னிந்தியாவில் வாய்ப்புகளை தேடி வருவதுண்டு.

அப்படி தென்னிந்தியாவில் வாய்ப்பைத் தேடி வந்து சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நடிகை என்று கூறலாம்.

தமிழில் வாய்ப்பு:

ஏனெனில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை எடுத்து நடிப்பதே அவர் வேலையாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வந்த வேகத்திற்கு காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில்  யாஷிகா ஆனந்தும் ஒருவராக இருந்து வருகிறார்.

2016 இல் வந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் முதன்முதலாக யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். அதற்கு பிறகு துருவங்கள் 16 திரைப்படத்திலும் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.

இப்படி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தில்தான் முதன் முதலாக இவருக்கு முக்கிய கதாபாத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சர்ச்சை:

முதல் திரைப்படத்திலேயே சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படமே சர்ச்சைக்குரிய ஒரு திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

ஆனால் தொடர்ந்து கதாநாயகி அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் யாஷிகா ஆனந்திற்கு வரவில்லை. தொடர்ந்து சோம்பி, பெஸ்டி போன்ற திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற திரைப்படம் ஒன்று வெளியானது. ஆனால் பெரும்பாலும் இவர் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் சினிமாவில் வரவேற்பை பெறுவதில்லை.

அவை தோல்வி காணும் திரைப்படங்களாகவே இருக்கின்றன. அதனாலேயே தொடர்ந்து வரவேற்பை பெறாமல் இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த். ஆனாலும் தொடர்ந்து தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை மறக்காமல் செய்து வருகிறார் யாஷிகா ஆனந்த் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு சில புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.