முழு நேரமும் குடி போதை.. பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயசில் பாரதிராஜா செய்த காரியம்..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா.

பொதுவாக முதல் திரைப்படத்தை இயக்கும்போது எந்த ஒரு இயக்குனர்களும் அதை ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக எடுக்க மாட்டார்கள். ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் அப்பொழுது கமர்சியல் நடிகராக இருந்த கமல்ஹாசனுக்கே கோவணம் கட்டி இருந்தார் பாரதிராஜா.

அந்த திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என்பது பாரதிராஜாவே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு பேட்டியில் கூறும்போது கூட பாரதிராஜா அந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் நான் பயந்து கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருந்தார்.

பாரதிராஜவின் வெற்றி:

அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை பாரதிராஜா கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்துதான் இயக்குனர்களின் இமையம் என்று இப்போது வரை அவர் அழைக்கப்பட்டு வருகிறார். சினிமாவில் வந்த காலகட்டங்களில் அவருக்கு நடிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

அதனை தொடர்ந்து அப்பொழுது நடிக்க முடியவில்லை என்றாலும் கூட இப்பொழுது சினிமாவில் முக்கியமான நடிகராக பாரதிராஜா இருந்து வருகிறார். இந்த நிலையில் பாரதிராஜா குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மதுப்பழக்கம்:

அதில் அவர் கூறும்பொழுது பாரதிராஜா இயக்கிய மூன்று படங்கள் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த சமயத்தில் பாரதிராஜா மிகவும் வெள்ளந்தியாக நிறைய விஷயங்களை பேசி விடுவார். அப்படி ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது காலையில் 9:00 மணிக்கு எழுந்து நான் குடிப்பேன்.

மூணு மணிக்கு மீண்டும் குடிப்பேன். இரவு 9 மணிக்கு மீண்டும் குடிப்பேன் ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிப்பேன் பெண்களுடன் எப்போதும் இருப்பேன். எப்போது பெண்களுடன் இருக்கிறானோ அப்போதெல்லாம் நான் குடிப்பேன்.

குடித்தால்தான் எனக்கு மூடு வரும். கோபம் வந்தாலும் நான் குடிப்பேன் இப்படி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் குடி குடி என்று குடிப்பழக்கத்திலேயே இருந்தேன். ஆனால் இப்பொழுது கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு மது பழக்கமும் இல்லை மாது பழக்கமும் இல்லை என்று பாரதிராஜா கூறியதாக பயில்வான் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.