அதுவும் வேணுமாம்.. ஆனால், குழந்தை மட்டும்.. நக்மா விபரீத ஆசை.. விளாசும் பிரபல நடிகர்..!

1990களில் பாலிவட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை நக்மா. ஆனால் பாலிவுட்டை விடவும் தமிழ் சினிமாவில்தான் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது என்று கூறலாம். 1990 ஆம் வருடத்திற்கு பிறகு ஒரு வருடம் அவருக்கு பெரிதாக ஹிந்தியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் 1992 இல் அவர் நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளியாக துவங்கின அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தமிழில் முதன்முதலாக காதலன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே அதிகபட்சமான கவர்ச்சியை வெளிப்படுத்தியதை அடுத்து நக்மாவிற்கு ஒரு பெரும் ரசிக்கப் பட்டாளம் தமிழ் சினிமாவில் உண்டானது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

இரண்டாவது படமே ஹிட்:

அதுதான் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம். பாட்ஷா திரைப்படத்திலும் ரஜினிகாந்திற்கும் நக்மாவிற்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே செட்டாகி இருந்ததால் அந்த படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன் போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். திரைப்படங்களில் நடித்து வந்த காலகட்டங்களில் அவர் நிறைய கிசுகிசுப்புகளுக்கு உள்ளானார். நிறைய நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டார்.

இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து அப்போதைய காலகட்டத்தில் நடித்தவர் நக்மா. அப்போது அவர் நடிகர் சரத்குமாருடன் பழக்கத்திலிருந்து பிறகு அந்த நட்பு நெருங்கிய உறவாக மாறியது.

சரத்குமாருடன் உறவு:

அவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் உறவில் வெகு நாட்கள் இருந்தனர். அதன் பிறகு தொடர்ந்து நக்மாவை சரத்குமார் ரூல் செய்த காரணத்தினால் அவர் சரத்குமார் விட்டு விலகிவிட்டார். பிறகு கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாகவும் கிசுகிசுப்புகள் அப்பொழுது இருந்து வந்தன.

சினிமா அரசியல் என்று இரண்டு பக்கங்களிலும் அதிக வரவேற்பு பெற்றவர் தற்சமயம் இவருக்கு 48 வயதாகிறது. 48 வயதாகியும் கூட நக்மாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை சொல்லப்போனால் அவர்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் நக்மாவிற்கு குடும்ப வாழ்க்கையின் மீது ஆசை வந்துள்ளது திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரை திருமணம் செய்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.