53 வயசிலும் இளமை.. வெற்றிமாறன் ஹீரோயினாகும் ராமராஜன் பட நடிகை சாந்திப்பிரியா..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த பானு பிரியாவினுடைய சகோதரியும் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த நடிகையுமானவர் நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா.

ஆந்திர பிரதேசத்தில் ராஜமுந்திரியில் பிறந்து வளர்ந்த சாந்தி பிரியா தெலுங்கு பேசும் குடும்பத்தை சேர்ந்தவர்.

நடிகை சாந்தி பிரியா:

அதையடுத்து இவரது குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்ததால் தொடர்ந்து இவரும் இவரது சகோதரியும் திரைப்படத்துறையில் தடம் பதிக்க ஆரம்பித்து கொடிகட்டி பறந்தார்.

மூத்த சகோதரி பானுப்பிரியா 80க்களில் திரைப்பட நடிகையாக இருந்து வந்த சமயத்தில் இவருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

சாந்தி பிரியா முதலில் நடன கலைஞர் ஆக இருந்து அதன் பிறகு நடிகையாக மாறினார். தெலுங்கு மற்றும் தமிழ் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முக்கியமான பல திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

அக்காவின் மூலம் சினிமாவில் அறிமுகம்:

தமிழ் படங்களில் நிசாந்தியாகவும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களை சாந்திப்ரியாவும் பெரும் புகழ்பெற்றார் நடிகை சாந்திப்பிரியா.

அக்கா பானுப்ரியா சினிமாவில் அறிமுகமான பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

அதை அடுத்து முதன் முதலில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “எங்க ஊரு பாட்டுக்காரன்” இந்த படத்தில் செண்பகம் எனும் கேரக்டரில் நடித்த சாந்தி பிரியா மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்றார்.

முன்னதாக 1987 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கபோயே அல்லுடு” என்ற திரைப்படத்தில் தான் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

வெற்றி திரைப்படங்கள்:

தொடர்ந்து ஒன்று எங்கள் ஜாதியே , மகரிஷி , சிகப்பு தாலி, ரயிலுக்கு நேரமாச்சு, பூ விழி ராஜா , என் வழி தனி வழி, அக்னி , அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி இந்தியிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். குறிப்பாக 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணிப் நடிகையாக பேசப்பட்டார்.

இதனிடையே அவரது மார்க்கெட் குறைய பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தி பிரியா.

குடும்ப வாழ்க்கை:

சாந்தி பிரியா 1992 இல் நடிகர் சித்தார்த் ரேயை செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சித்தார்த் ரே கடந்த 2004ல் தன்னுடைய 40 வயதில் மாரடைப்பால் இறந்தார்.

தற்போது 53 வயதாகும் நடிகை சாந்திப்பிரியா பார்ப்பதற்கு இன்னும் அதை இளமையான தோற்றத்தோடு இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

53 வயதில் ஹீரோயினாக ரீ என்ட்ரி:

ஆம், வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளாராம் சாந்திப்ரியா.

வயசு 53 ஆகி இன்னும் அவரது இளமை அழகு குறையாமல் அப்படியே பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் இருக்கும் சாந்தி பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.