இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!

சினிமாவில் இளம் வயதில்தான் பெரும்பாலும் நடிகைகள் கதாநாயகிகளாக அறிமுகமாவார்கள். ஏனெனில் வயதான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைந்துவிடும். ஆனாலும் சில நடிகைகளுக்கு வயதான பிறகும் கூட சினிமாவில் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.

பொதுவாக இளமையாக இருக்கும்போது அவர்கள் அறிமுகமாகும்போது அவர்களது முகம் எப்படி இருக்கிறதோ அப்படியே வயதான பிறகும் இருக்காது. 10 வருடங்கள் கழித்து அவர்களது முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து இருக்கும்.

உதாரணத்திற்கு நடிகை நயன்தாராவையே எடுத்துக் கொண்டால் ஐயா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது இருந்த முக அமைப்பிற்கும் இப்பொழுது இருக்கும் நயன்தாராவின் முகத்திற்கும் இடையே நிறைய வேற்றுமைகளை பார்க்க முடியும்.

முகம் மாறா நடிகை:

ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முகத்தில் மாற்றங்களே இல்லாமல் இன்னமும் இளமையாகவே ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைதான் நடிகை திரிஷா.

தமிழில் முதன் முதலில் லேசா லேசா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை திரிஷா. லேசா லேசா திரைப்படத்தில்தான் அவர் முதலில் நடித்தார் என்றாலும் அதற்கு முன்பே அவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் வெளியான காரணத்தினால் திரிஷாவின் முதல் படமாக மௌனம் பேசியதே திரைப்படம் மாறியது.

அதனை தொடர்ந்து சாமி, கில்லி, திருப்பாச்சி என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பயங்கரமான வெற்றியை கொடுத்த திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தார் திரிஷா.

தொடர்ந்து வாய்ப்பு:

2002ல் துவங்கி 2010 வரையிலுமே நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. 2011க்கு பிறகுதான் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் தன் நடித்து வந்தார் திரிஷா.

2015 ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் மார்க்கெட் கிடைத்தது. அதனை தொடர்ந்து நடித்து வந்த திரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு திருப்புமுறையாக அமைந்தது. அதற்குப் பிறகு மீண்டும் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடிக்க துவங்கியிருக்கிறார்.  சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுதான் பிரபலமாக வேண்டும் என்கிற தேவை திரிஷாவிற்கு கிடையாது என்றாலும் கூட ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் அடிக்கடி அவர் புகைப்படங்களை வெளியிடுவது உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் த்ரிஷா ரசிகர்களுக்கு பிடித்த புகைப்படங்களாக இதை அமைந்துள்ளன. ஏனெனில் மற்ற நடிகைகள் போல அடிக்கடி த்ரிஷா புகைப்படங்கள் வெளியிட மாட்டார். எப்போதாவது ஒருமுறைதான் இந்த மாதிரி வெளியிடுவார்.