விவாகரத்திற்கு பிறகு கிளாமர் வெடிகுண்டாக மாறிய திரௌபதி ஷீலா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் வெகு சில நடிகைகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் .

அந்த வகையில் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஷீலா ராஜ்குமார்.

நடிகை ஷீலா ராஜ்குமார்:

இவர் திரௌபதி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். இவரை ரசிகர்கள் வெகு சீக்கிரத்திலேயே அடையாளம் காணக்கூடிய அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

பரதநாட்டிய கலைஞராக இருந்து வந்த ஷீலா ராஜ்குமார் கடந்த 2012 ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகம் ஆனார்.

இவர் திரைப்படத்துறையில் நடிகையாக வருவதற்கு முன்னர் பல்வேறு குறும்படம் மற்றும் நாடங்கங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் YouTube- களில் மிகவும் பிரபலமாக வலம் வந்த ஷீலா ராஜ்குமாருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது .

சீரியல்களில் ஷீலா:

மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் . அழகிய தமிழ் மகள் சீரியலில் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்ததன் மூலமாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ்நாட்டில் உள்ள ஜெயம் கொண்டான் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான ஷீலா சிறு வயதிலிருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பல்வேறு நடன போட்டிகளில் கலந்துக்கொண்டு முறையாக பரதநாட்டியத்தை கற்று வந்தார்.

இவர் பரதநாட்டியத்தில் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். அதன் பிறகு நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .

கூத்துப்பட்டறையில் நடிப்பு கலையை கற்றுக்கொண்ட ஷீலா ராஜ்குமார். முதன் முதலில் நாடகங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு திரைப்பட இயக்குனரான அறிவழகன் “ஆறாவது சினம்” திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தார் .

திரௌபதி திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமான ஷீலா ராஜ்குமார் கடந்த 2017 ஆம் ஆண்டில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

திரைப்படங்கள்:

தொடர்ந்து அசுரவதம், கும்பலங்கி நைட்ஸ் சென்ற மலையாள திரைப்படம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை,திரௌபதி, மண்டேலா , பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார்.

இதில் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அந்த திரைப்படம் ஷீலாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் தம்பி சோழன் என்ற ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்…. விவாகரத்து:

இவர் திருச்சிராப்பள்ளியில் நடிப்பு பயிற்சி பட்டறைகளை நடத்தி வந்த குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து திடீரென தான் திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் எனக்கூறி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.

இதை அடுத்து விவாகரத்துக்கு பிறகு படு கிளாமராக திரௌபதி சீலா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார். ஆம் கிளாமரான உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதன் மூலம் படவாய்ப்பை தேடி வருகிறார்.

தெறிக்கும் கவர்ச்சி:

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் விவாகரத்துக்கு பிறகு கிளாமர் வெடிகுண்டாக மாறிட்டாரே திரௌபதி ஷீலா என அவரை விமர்சித்து வருகிறார்கள்.

வெறும் டாப் மட்டும் அணிந்துக் கொண்டு கவர்ச்சி தாறுமாறாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.