பார்த்திபன் சொல்றது பொய்.. இது தான் விவாகரத்துக்கு காரணம்.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

1957-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி பிறந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்ற இயக்குனர் பார்த்திபன் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு மிகச் சிறப்பான பெயர் உள்ளது. இவர் வித்தியாசமான திறமைகளை அவ்வப்போது தன் படங்களில் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பாக பேசக்கூடியவராகவும் விளங்குகிறார்.

பார்த்திபன் சொல்லுவது பொய்..

நடிகர் பார்த்திபன் முதல் முதலாக புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடிக்கும் போது அந்த படத்தில் நடிகை சீதா நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆனதோடு ரியல் லைஃப்லும் காதல் பூத்ததை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

மேலும் சீதாவின் வீட்டில் இவரது காதலுக்கு பலத்தை எதிர்ப்பு இருந்ததால் அதையும் மீறி வீட்டை விட்டு வெளியே வந்து இயக்குனர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு சிறப்பான முறையில் மண வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு தற்போது தனித்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் ஏன் தன் முன்னால் மனைவியை விட்டு பிரிந்தேன் என்பதை அண்மையில் பார்த்திபன் விளக்கி இருப்பதற்கு நடிகை சீதா பதிலடி கொடுத்திருக்கிறார்.

விவாகரத்துக்கு காரணம் இதுதான்..

இந்த விஷயத்தில் நடிகர் பார்த்திபன் தனது முன்னாள் மனைவி தன்னிடம் அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்ததன் காரணத்தால் தான் இருவரும் பிரிய நேர்ந்தது என்பதை ஓபன் ஆக கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விவாகரத்து காரணத்தை மறுத்து பேசி இருக்கும் நடிகை சீதா எந்த ஒரு கணவனிடமும் மனைவி எதிர்பார்க்கக் கூடிய விஷயம் தான் இது எங்களது பிரிவுக்கு காரணம் என்று கூறி இருப்பது மிகவும் தவறு என்று சொல்லி இருக்கிறார்.

அத்தோடு ஒரு சராசரி பெண் தன் கணவனிடம் எதை அதிகளவு எதிர்பார்ப்பாரோ அதைத்தான் தான் எதிர்பார்த்தேன். எனினும் அது எனக்கு கிட்டாமல் போனதை அடுத்த தான் எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதாக சீதா கூறி இருக்கிறார்.

ரகசியத்தை உடைத்த சீதா..

நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு உள்ளே வெளியே, ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் திருமணத்திற்கு முன்பு இவருக்கு கிடைத்த வெற்றி விவாகரத்துக்கு பிறகு கிடைத்ததா? என்றால் அது கேள்விக்குறியாக தான் உள்ளது.

மேலும் பல்துறை வித்தகர் ஆன பார்த்திபன் கிறுக்கல்கள் என்ற ஒரு நூலை எழுதி இருக்கிறார். மிகச் சிறந்த கவிதை தொகுப்பாக இந்த நூல் உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் பார்த்திபனின் விவாகரத்து கருத்துக்கு பதில் அளித்து நடிகை சீதா கூறி இருக்கும் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதனை அடுத்து இவர்கள் ரசிகர்கள் இருவருமே இவர்கள் பிரிந்து இருக்காமல் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற விதத்தில் கலவை ரீதியான விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

மேலும் நடிகை சீதாவிற்கு விவாகரத்து ஆன காரணத்தைப் பற்றி அறிந்து கொண்ட ரசிகர்கள் இதனை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயமாக மாற்றி விட்டார்கள்.