ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. தொடையை முழுசாக காட்டி பார்க்க சொல்லும் டிவி பிரபலம் சுனிதா..!

பொதுவாக வட இந்தியாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. ஆனால் அசாமில் இருந்து வந்து தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா.

விஜய் டிவியில் பல வருடங்களாக பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுனிதா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்து வருகிறார்.

ஏற்கனவே தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

சுனிதாவுக்கு வந்த பிரச்சனை:

ஆனால் அவரிடம் இருந்த பெரிய பிரச்சனையே சுனிதாவிற்கு சுத்தமாக தமிழே தெரியாது. இந்த நிலையில் தமிழ் தெரியாத ஒரு பெண்ணை வைத்து திரைப்படம் எடுப்பது கடினம் என்பதால் அவரை நிறைய திரைப்படங்களில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தனர்.

இந்த நிலையில்தான் விஜய் டிவியில் வாய்ப்பைப் பெற்று விஜய் டிவிக்கு வந்தார் சுனிதா. விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சுனிதாவிற்கு அதில் வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. தமிழே தெரியாமல் அவர் பேசும் விதமும் பாடல் பாடுவதும் அதிக நகைச்சுவையாக இருந்ததை அடுத்து மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கத் துவங்கினர்.

அதனை தொடர்ந்து மூன்று சீசன்களாகவே குக் வித் கோமாளியில் சுனிதா பங்கேற்று வருகிறார். இதற்கு நடுவே காஞ்சனா 3 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாய் சேகர் திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் சுனிதா நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் பிரபலம்:

இந்த இரண்டு வாய்ப்புகளும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்தான் இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து மான் வேட்டை, இரவு ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் சுனிதா.

இப்போது வரை கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு என்பது அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால் கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் அவருது ஆசையாக இருந்த வருகிறது.

எனவே கோலிவுட் நடிகைகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது போலவே இவரும் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன.