பலரும் அறியாத வாழ்க்கை வரலாறு..! நடிகை சீதாவின் தாங்க முடியா சோகம்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை சீதா. இயக்குனர் பாண்டியராஜனின் முதல் திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சீதா.

அந்த திரைப்படத்திலேயே அவரது பெயர் சீதா என்றுதான் இருக்கும் அவருடைய இயற்பெயர் சைரந்திரி என்பதாகும். முதல் திரைப்படத்தில் சீதா என்கிற பெயரில் நடித்ததால் பிறகு அதையே அவரது பெயராக மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் பார்த்திபனின் முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படத்திலும் சீதா நடித்தார். அந்த சமயத்தில் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையே காதல் உருவானது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம்:

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள்தான் நீடித்தது சீக்கிரமே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். புதியபாதை திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களில் சீதா நடிக்கவில்லை. அதன் பிறகு சில திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த வகையில் ஆதி, மதுர, வியாபாரி போன்ற திரைப்படங்களில் நடித்த சீதா பிறகு மீண்டும் சினிமாவில் இருந்து அவர் காணாமல் போய்விட்டார். இதற்கு நடுவே சீதா குறித்து நிறைய சர்ச்சைகள் சினிமாவில் உருவாகின. சின்னத்திரையில் நடித்து வந்த சீதாவிற்கு சதீஷ் என்னும் நபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அந்த நபருடன் ஆறு வருடம் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளார் சீதா. அதன் பிறகு பத்திரிக்கையில் விபச்சாரம் செய்யும் நடிகைகள் லிஸ்ட் என்று ஒரு செய்தி வெளியாகிறது. அந்த லிஸ்டில் நடிகை சீதாவின் பெயரும் இருந்தது.

தொடர்ந்து பரவிய வதந்தி:

அதற்கு தகுந்தார் போல சீதாவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் தொடர்ந்து சீதாவின் வீட்டிற்கு நிறைய ஆண்கள் வந்து செல்வதாகவும் அது அருகில் குடியிருப்பவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து சீதா தவறான தொழில் செய்து வருவதாக பலரும் பேச தொடங்கினர். இதனை அடுத்து அவருடன் பழகி வந்த சதீஷ் அவரை விட்டுச் சென்றார். இந்த நிலையில் தற்சமயம் தனிமையில் வாழ்ந்து வருகிறாராம் சீதா.

அவரின் மகளான கீர்த்தனா மட்டும் அவ்வப்போது வந்து சீதாவை பார்த்துவிட்டு செல்கிறாராம். மற்றபடி தனிமையே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் சீதா மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறாராம். ஆனால் பார்த்திபன் இதற்கு எந்த ஒரு பதிலும்  வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.