மனைவியை பிரிகிறார் நடிகர் ஜெயம் ரவி..? இது தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரைப்பட நடிகரான ஜெயம் ரவி 1980-இல் பிறந்தவர். இவர் மதுரை திருமங்கலத்தில் பிறந்ததை அடுத்து இவரது தந்தை ஒரு எடிட்டராக திகழ்கிறார். இவர் தன்னுடைய தந்தை தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளி வந்த ஜெயம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

முதல் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தப் படத்தின் பெயரை இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக இணைந்து கொண்டது. இந்த படத்தை அடுத்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார்.

நடிகர் ஜெயம் ரவி..

இதனை அடுத்து இவர் தனது வித்தியாசமான நடிப்பை தனி ஒருவன் படத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. மேலும் 2014 -ஆம் ஆண்டு பூலோகம், நிமிர்ந்து நில், நினைத்தது யாரோ போன்ற படங்களில் நடித்த இவர் 2010-இல் தில்லாலங்கடி படத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பேராண்மை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், மழை, தாஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.

தற்போது திரைஉலகத்தில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பலரும் விவாகரத்து செய்து வருகின்ற வேளையில் நடிகர் ஜெயம் ரவி தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற தகவலானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மனைவியை பிரிய இருக்கிறாரா..

இந்நிலையில் இது பற்றி பேசியிருக்கும் சவிதா ஜோசப் சூர்யா ஜோதிகா போல கோலிவுட் சினிமாவில் ஜெயம் ரவி ஆர்த்தி நட்சத்திர ஜோடிகளாக திகழ்கிறார்கள். இது வரை இவர்கள் எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை.மேலும் மிக சிறந்த மனம் ஓத்த தம்பதிகளாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து விஷயமானது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஏனெனில் விவாகரத்து வேண்டி ஜெயம் ரவி கோர்ட்டில் அப்ளை செய்து விட்டார் போன்ற சில தகவல்கள் நம்பகத் தன்மையை ஏற்படுத்துகிறது.

இது தான் காரணமா?..

ஆனால் இந்த விஷயம் உண்மையாக இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் பலரும் வேண்டி வருகிறார்கள். ஆர்த்தி ஜெயம் ரவியை மிகவும் விரும்பித் தான் திருமணம் செய்து கொண்டார்.எனவே அவரை பிரிய மனம் இல்லாமல் இருக்கிறார் என்பது போன்ற செய்திகள் தினம் தினம் வருகிறது என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

இந்நிலையில் சபிதா ஜோசப் தெரிவித்துள்ள கருத்தாக இந்த கருத்து உள்ளதால் இது பற்றிய உண்மையான கருத்து என்ன என்பது இது வரை ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து அவர்கள் நினைப்பது போல இருவரும் விவாகரத்தில் பெறக் கூடாது என சொல்லி வருகிறார்கள்.