நடிகையிடம் சைஸ் என்ன என்று கேட்ட கமல் பட கம்பெனி..! நடிகையே கூறிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் திரைப்பட நடிகராகவும், அரசியல்வாதியாகவும் புகழ்பெற்று வருகிறார். இவர் திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை யாரும் இதுவரை யோசிக்க கூடாத அளவுக்கு இருக்கும்.

கதைக்கும் , கதாபாத்திரம் ஏற்றவாறு கனகச்சிதமான நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் உலகநாயகனாகவும் பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

நடிகர் கமல் ஹாசன்:

திரைத் துறையில் குழந்தை நட்சத்திரம் ஆக நடிக்க ஆரம்பித்த கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.

சிறந்த திரைப்படம் முறையில் 1 தேசிய விருதும், பத்து தமிழக அரசு திரைப்பட விருதுகளும், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகளும், 19 ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்று பிரபலமான நடிகராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

வயது கிட்டத்தட்ட 70 நெருங்கியும் கூட இன்னும் அவருக்கான மார்க்கெட் குறையவே இல்லை. அவரது திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படமாகவே இருந்து வருகிறது .

தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். முன்னதாக அவர் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

விக்ரம் திரைப்படம்:

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக தமிழ் சினிமாவில் வெற்றியை குவித்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்தை இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பு எல்லோரையும் வியக்க வைத்தது.

இந்த திரைப்படத்தில் விபச்சாரம் செய்யும் இடத்தில் மேனேஜராக நடித்திருந்தவர் நடிகை தான் பிரியதர்ஷினி ராஜ்குமார் .

இவர் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது விக்ரம் படத்தில் நான் நடிக்க கமிட் ஆனேன்.

உடனே எனக்கு காஸ்டியூம் டீமில் இருந்து அழைப்பு வந்தது அவர்கள் என்னிடம் நாங்கள் விக்ரம் டீமில் இருந்து பேசுகிறோம்.

நடிகையிடம் சைஸ் கேட்ட ராஜ்கமல் நிறுவனம்:

உங்களுடைய பனியன் மற்றும் பேண்ட் சைஸ் என்னவென்று சொல்லுங்கள் எங்களுக்கு வேண்டும் என கேட்டார்கள் .

இதைக் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல்… இதுவரை என்னை யாரும் இப்படி தொடர்பு கொள்ளவே இல்லையே…? இப்படி கேட்டால் நான் எப்படி சொல்ல முடியும்? என கேள்வி கேட்டேன்.

பின்னர் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் இருந்து போன் வந்தது அவர்களிடம் உடை சைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படித்தான் இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. விக்ரம் படத்தில் எனது ரோல் ஏஜென்ட் லெவலுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், அப்படி அமையவில்லை லோகேஷ் படம் என்பதால் ஒரு சின்ன ரோலாக இருந்தாலும் ஓகே என்று நினைத்துதான் இந்த படத்தில் நடித்தேன் என பிரியதர்ஷினி அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தொலைக்காட்சி நடிகையும் திரைப்பட நடிகையின்மான நடிகை பிரியதர்ஷினி அச்சம் என்பது மடமையடா, கவன், ரெமோ, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரம் ரோல்களில் நடித்து வரும் இவர் படத்திற்கு படம் தன்னுடைய கேரக்டரில் மிக கச்சிதமாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியதர்ஷினியின் பேட்டி:

பிரியதர்ஷினி விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கவண் திரைப்படத்தில் டிவி சேனல் நடத்தும் நபராக நடித்திருப்பார் .

இப்படத்தில் விஜய் சேதுபதி நேர்காணல் எடுக்கும் போது விஜய் சேதுபதி பயங்கரமாக திட்டும் காட்சிகளில் இவர் தாறுமாறாக நடித்திருப்பார்.

அது குறித்து பேசிய பிரியதர்ஷினி அப்போது விஜய் சேதுபதி அப்கம்மிங் ஹீரோ. ஆனால் இப்போ அந்த மாதிரி அவர திட்ட முடியுமா? அவரது வளர்ச்சி எங்கயோ போய்விட்டது என கூறினார்.