அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றதுல என்ன தப்பு.. ஒரே இரவில் 19 புக்கிங்.. ஷங்கர் பட நடிகை..!

பொதுவாக ஷங்கர் திரைப்படத்தில் நடிப்பது என்பது நடிகைகள் பலருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஷங்கர் திரைப்படத்திலேயே சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை பூனைஸ்வரி பாய்ஸ்.

அந்த திரைப்படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியில் இவர் நடித்திருப்பார். பிறகு இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது அந்த காட்சியில் என்னை மிகவும் டீசண்டாக நடிக்க வைத்திருந்தார் ஷங்கர் என்று சங்கரை பெருமைப்படுத்தி பேசி இருந்தார்.

இவர் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் புவனேஸ்வரி. பூனைக்கண் புவனேஸ்வரி என்று கூறினால் திரைத்துறையில் பலருக்கும் இவரை தெரியும். அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர்.

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய நடிகை:

இந்த நிலையில் இவரை குறித்து பத்திரிக்கையாளர் ஜோசப் என்பவர் சில விஷயங்களை பேசி இருக்கிறார். இவர் பிரபலமான வார பத்திரிகை ஒன்றில் நிரூபராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு முறை பூனைக்கண் புவனேஸ்வரியை பேட்டி எடுக்க செல்லும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பூணைக்கண் பவனேஸ்வரி நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் சாதாரண விஷயம்தான். வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சமயத்தில் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் நடக்கிறது என்று புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை என பேட்டி கொடுத்திருந்தார்.

ஒரே இரவில் வாய்ப்பு:

இந்த பேட்டியை புவனேஸ்வரி கொடுத்த பிறகு அது செய்தியாக வெளிவந்தது. பிறகு ஒரே இரவில் 19 படங்கள் மற்றும் சீரியல்களில் புவனேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி நேரடியாக அட்ஜஸ்ட்மென்ட் ஒன்றும் தவறில்லை, அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயார் என்று அவர் பேசும்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைப்பது இயற்கை தான்.

ஆனால் அப்படி பேசிவிட்ட பிறகு புவனேஸ்வரி தான் அப்படி பேசவே இல்லை என்று சாதித்திருக்கிறார். பூணைக்கண் புவனேஸ்வரி பத்திரிகையாளர் ஜோசப்பிடம் சென்று நான் இந்த மாதிரி பேட்டியில் எதுவுமே பேசவில்லை அது தவறாக எழுதப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பத்திரிக்கையாளர் ஜோசப் நீங்கள் பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது வேண்டுமென்றால் போட்டு காட்டட்டுமா? என்று கேட்டிருக்கிறார் இதனால் பயந்து போன புவனேஸ்வரி பிறகு எதையோ பேசி மலிப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ஜோசப்