பண்ணை வீட்டில் 15 நாள் கும்மாளம்.. மகுடி நடிகைக்கு கிலோ கணக்கில் நகைகளை வாங்கி கொடுத்த பாம்பு நடிகர்..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து வருகின்றன. பல நடிகைகள் சினிமாவிற்கு ஆரம்பத்தில் வரும் பொழுது வாய்ப்புகளை பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் வேண்டாம் என்று நினைக்கும் நடிகைகளும் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்  பெங்களூரை சேர்ந்த நடிகை ஒருவர் செய்த விஷயம் தான் ஒரு பத்திரிக்கையாளர் மூலமாக தமிழ் சினிமாவில் பேசுபொருளாகி வருகிறது.

பெங்களூர் நடிகை:

பெங்களூரில் பிறந்த இந்த நடிகை முதலில் கன்னட படங்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர். அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் கேப்டனை வைத்து ஜாதியின் பெயரில் படம் எடுத்த அந்த இயக்குனர் இந்த நடிகையின் அழகில் மயங்கி இருக்கிறார்.

இந்த நடிகையை கண்டிப்பாக நாம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து நடிகைகள் விஷயத்தில் வீக்கான இயக்குனர் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதற்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் இவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது பல நடிகர்கள் இவருடைய அழகில் மயங்கிபோனார்கள் என்று கூறலாம். இந்த நிலையில் தொடர்ந்து அந்த நடிகையுடன் நடிக்க நடிகர்கள் போட்டி போடும் ஒரு சூழல் உருவானது.

பெரும் நடிகருடன் தொடர்பு:

இதனை தொடர்ந்து சின்ன நடிகர்களுடன் நடிக்காமல் தொடர்ந்து பெரும் நடிகர்கள் மற்றும் சீனியர் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்து கொண்டிருந்தார் இந்த நடிகை.

இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க அங்கேயும் சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக இவர் நடித்திருக்கிறார். தெலுங்கு தமிழ் என்று இரண்டு சினிமாவிலும் உள்ள நடிகர்கள் இந்த நடிகையுடன் நடிக்க ஆசைப்பட்டுள்ளனர்.

பிறகு அரசியல் கட்சியில் இணைந்த நடிகை அரசியல் காரணத்துக்காக வானில் பறந்த பொழுதே விபத்தில் மரணம் அடைந்தார். தமிழில் உச்ச நட்சத்திரமாக இருந்த ஒரு நடிகருடன் இரண்டு படங்களில் இவர் நடித்த பொழுது அந்த நடிகர் இவரின் அழகில் மயங்கி மைசூரில் இருக்கும் தன்னுடைய ஆடம்பர பண்ணை வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இவர்கள் இருவரும் 15 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர் இதன்பிறகு நடிகர் அந்த நடிகையை விட்டு பிரிய விருப்பம் இல்லாமல் பிரிந்ததோடு மட்டுமல்லாமல் கிலோ கணக்கில் அவருக்கு தங்கமும் கொடுத்து இருக்கிறார்.

மேலும் லட்சக்கணக்கில் பணமும் கொடுத்து இருக்கிறார் இதே போல இந்த நடிகை வேறொரு நடிகருடனும் இதே போல ஜாலி செய்து அந்த நடிகரும் இதே போல அவருக்கு நகை கொடுத்ததாக ஒரு செய்தி உண்டு. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.