எட்டு மாச கர்ப்பமா இருந்தேன்… அப்போவும் நைட்டு விடாம டார்ச்சர் பண்ணாரு.. ரகசியம் உடைத்த குஷ்பூ..!

தமிழ் சினிமாவில் நடிகைகள் பிரபலமான இயக்குனர்களை திருமணம் செய்து கொள்ளும் காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது எப்படி நடிகைகள் தொழிலதிபர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதே போல அப்பொழுது இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர்.

அதற்கு முக்கிய காரணமும் உண்டு. ஏனெனில் ஒரு பிரபல இயக்குனரின் மனைவியாக இருந்து நடிகையாக இருப்பவரை வேறு எந்த நடிகரும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்க மாட்டார்கள். எனவே திரைத்துறையில் பாதுகாப்பாக வலம் வருவதற்கு இயக்குனரின் மனைவியாக இருப்பதே முக்கிய விஷயமாக இருந்த காரணத்தினால் பலரும் இயக்குனர்களை திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் காதல்:

முறைமாமன் திரைப்படத்தில் நடித்த பொழுது இயக்குனர் சுந்தர் சிக்கும் குஷ்பூவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வெகு காலங்களாக இப்போது வரை மற்ற துறை பிரபலங்கள் போல பாதியிலேயே விவாகரத்து எல்லாம் செய்து கொள்ளாமல் வெற்றிகரமாக தம்பதிகளாக குஷ்புவும் சுந்தர்சியும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சுந்தர் சியால் திருமணத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட கஷ்டம் குறித்து ஒரு மேடையில் பேசியிருக்கிறார் குஷ்பூ. அதில் அவர் கூறும் பொழுது எனக்கு குழந்தை பிறக்க இருந்த காலகட்டத்தில் நான் படப்பிடிப்புகளில் நடிக்க கூடாது என்று இருந்தேன்.

எனவே நான் அப்பொழுதே கூறி இருந்தேன். செப்டம்பர் மாதத்தின் இறுதியில் எனக்கு குழந்தை பிறப்பதற்கு இருந்தது. எனவே நான் ஆகஸ்ட் மாதம் பாதி வரைதான் படப்பிடிப்பில் நடிப்பேன். அதற்கு பிறகு நான் படப்பிடிப்பை விட்டு சென்று விடுவேன் என்று கூறினேன்.

படாதப்பாடு பட்ட குஷ்பூ:

அதற்கு இயக்குனர்களும் ஒத்து போயிருந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாத நேரத்தில் நான் சுந்தர் சி யின் திரைப்படத்தில்தான் நடித்து வந்தேன் செப்டம்பர் மாதமும் துவங்கி விட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது.

அப்பொழுது படத்தில் ஒரு காட்சியில் மூன்று மாடி தாண்டி மொட்டை மாடியில் படப்பிடிப்புக்கு ஏறி வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்படியான கற்ப நிலையிலும் நான் அங்கு ஏறி வந்தேன். ஆனால் அப்பொழுது என்னுடைய காஸ்டியூம் சரியில்லை என்று மீண்டும் மாற்றி விட்டு வர சொன்னார்கள்.

இதனால் கடுப்பாகி அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு இனி குழந்தை பிறந்த பிறகுதான் நான் வந்து படபிடிப்பில் நடிப்பேன் என்று கூறிவிட்டு நான் வந்து விட்டேன் அந்த அளவிற்கு என்னை மிகவும் டார்ச்சர் செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்சி என்று கூறுகிறார் நடிகை குஷ்பூ.