என் இந்த உறுப்பை.. அந்த முறையில்.. பெருசாக்க சொன்னாங்க.. மிரண்டு போயிட்டேன்.. சமீரா ரெட்டி வேதனை..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சில நாட்களே பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமீரா ரெட்டி. 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி.

அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் சமீரா ரெட்டி.

அதற்கு பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு மொத்தமாகவே சினிமாவில் பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். ஆரம்ப கால கட்டங்களில் சினிமாவில் அறிமுகம் ஆகும் பொழுது நடிகைகள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

வரவேற்பு குறைந்த சமீரா:

அந்த வகையில் தனக்கு நடந்த விஷயங்களை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. அதில் அவர் கூறும்போது சினிமாவில் என்னுடைய ஆரம்ப காலத்தில் நான் டஸ்கியாக இருந்தேன். நல்ல உயரம், வாட்ட சாட்டமான தோற்றம், பலர் என்னுடைய தொடையழகை வருணித்திருக்கிறார்கள்.

மேலும் என்னை பிளம் கேக் என்றெல்லாம் கூட வருணித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு தெரிந்த சில நேரங்களில் என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் இருந்து இந்த ஒரு ஆலோசனை எனக்கு வந்திருக்கிறது.

அவர்கள் பொதுவாக ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்கள். அது என்னவென்றால் நீ ஏன் உன்னுடைய முன்னழகை இம்பிளான்ட் செய்து கொண்டு பெரிதாக்க கூடாது..? அப்படி பெரிதாக்கினால் உன்னுடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் இருக்கும்.

நண்பர்கள் ஆலோசனை:

நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும். உன்னோட வாழ்க்கை மிகவும் எளிமையாகிவிடும். நிறைய பணம் சம்பாதிக்கலாம். உன்னுடைய ஒட்டுமொத்த அழகையும் சிறிதாக இருக்க கூடிய உன் முன்னழகு கெடுக்கிறது.

எனவே இம்பிளான்ட் செய்து கொண்டு பெரிதுபடுத்தி விட்டால் உன்னுடைய மார்க்கெட் வேற ரேஞ்சுக்கு சென்று விடும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அப்படி கூறியவர்கள் பலரில் நான் நண்பர்கள் என்று யாரை நினைத்துக் கொண்டிருந்தேனோ அவர்களும் அடக்கம். அதனால் நான் மிரண்டு போய்விட்டேன். இயற்கையாக என்னுடைய உடல் என்னுடைய உடலமைப்பு என்னுடைய உறுப்புகள் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் இல்லாமல் இருக்கும் பொழுது அதனை நான் வெறும் கவர்ச்சிக்காகவும் பணத்துக்காகவும் கெடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்..? என எனக்கு தெரியவில்லை.

என்னுடைய உடலை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. செயற்கையான முறையில் என்னுடைய உறுப்பை பெரிதுப்படுத்திக்கொள்ள நான் யோசித்துக் கூட பார்த்தது கிடையாது என சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.