கமல்ஹாசன் பிடியில் சிக்கி திணறும் ரம்யா கிருஷ்ணன்..! அவரே கூறிய தகவல்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று வரை எவர்கீன் நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார்.

இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அம்மன் வேடத்தையும் ஐட்டம் சாங்கையும் பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் தமிழில் அம்மன் படத்தில் அம்மனாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.

ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் அதனை அடுத்து தான் ஹீரோயினியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அது போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரியாக தனது கேரக்டரோடில் பக்காவாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றெடுக்கிறார்.

இந்த படத்தில் பேசிய வசனங்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது அந்த வசனத்துக்கு ஏற்ப இவரும் இன்றும் இளமையாகவும் அழகோடும் காட்சி கொடுக்கிறார்.

மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் வெளி வந்த பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இவரது நடிப்பை பார்த்து பல திரைப்பட வாய்ப்புகள் என்றும் வந்த வண்ணம் உள்ளது.

கமலஹாசன் பிடியில் சிக்கித் திணறுகிறாரா?..

சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கக்கூடிய ரம்யா கிருஷ்ணன் அடிக்கடி பேட்டிகளை கொடுத்து அசத்துவதில் வல்லவர். அந்த வகையில் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பஞ்சதந்திரம் படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் அந்த படத்தில் இவர் வசனத்தை பேசிக் கொண்டே கமலஹாசனை சுவரில் இருந்து நகர்த்த வேண்டிய காட்சி இருந்தது. அந்த காட்சியை எடுக்கும் போது தான் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறி இருக்கிறார்.

அவரே சொன்ன தகவல்..

இதனை அடுத்து பஞ்சதந்திர படத்தில் அந்த காட்சியில் நடிக்கும் போது கடுமையான சங்கடங்களை சந்தித்ததாக அவரை சொன்னதை அடுத்து அந்த காட்சியை பார்க்கும் போது எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் ஆனது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.