ஒரே ஒரு படம்.. ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் க்ளோஸ்.. பிரியங்கா மோகன் விசனம்..!

பிரியங்கா அருள் மோகன் 1994-ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்தவர். இவரை அனைவரும் பிரியங்கா மோகன் என்றே அழைக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகரிப்பு நடித்திருக்க கூடிய இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நானியின் கேங் லீடர் திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருந்தார். அத்தோடு 2021-ஆம் ஆண்டு ஸ்ரீ கரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை பிரியங்கா மோகன்..

அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகன் 2021 – இல் நெல்சன் திலிப் குமார் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தமிழில் முதல் படமே முன்னணி ஹீரோவாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததை அடுத்து இந்த படம் 175 கோடிக்கு மேல் வசூல் செய்து 2022-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது.

அதிர்ஷ்டசாலி நடிகை என்று அழைக்கப்படும் பிரியங்கா அடுத்த படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டான் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் வருவார் என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக பலர் மத்தியிலும் எகிறியது.

ஒரே ஒரு படம்..

இதனை அடுத்து தமிழில் சூப்பர் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுசுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தினார். எனினும் இந்தத் திரைப்படம் அவருக்கு போதிய அளவு வெற்றியை தரவில்லை.

மேலும் தமிழில் பட வாய்ப்புக்கள் வருவது குறைந்ததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று இருக்கக்கூடிய இவர் அறிமுகமான சமயத்தில் டிக் டாக் என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். 

மேலும் இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன் இந்த படம் வெளியான பிறகு மிகப்பெரிய விசனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்

மொத்த சினிமா வாழ்க்கையும் க்ளோஸ்..

இதற்கு  காரணம் தனக்கு வரக்கூடிய பட வாய்ப்புகள் அனைத்திலும் இப்படியான படுக்கை அறை காட்சி நடிக்க வேண்டும். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும். முத்த காட்சிகள் நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் மட்டுமே இயக்குனர்கள் அணுகுகிறார்கள் என்பதால் விசனத்தில் மூழ்கி இருக்கிறாராம் பிரியங்கா மோகன்.

இப்படி ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையும் க்ளோஸ் என்ற நிலையில் சரியான பட வாய்ப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் பிரியங்கா மோகன் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இதனை அடுத்து விஷயம் அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் ஒருமுறை இது போன்ற காட்சிகளில் நடித்து விட்டால் அதற்கான முத்திரையை குத்தி சினிமா உலகில் ஒதுக்கி வைத்து விடுவார் என்ற விவரம் கூட இல்லாமலா பிரியங்கா மோகன் அந்த மாய வலையில் சிக்கிக் கொண்டார் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி விட்டார்கள்.