ஷர்மிளாவுக்கு 3 புருஷன்கள்.. அந்தரங்கத்தை பிரித்து மேயும் நடிகர்.. பெருகும் மலிவான ரசனை..!

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தன் வாய்க்கு வந்த படி எல்லாம் திரைத்துறையில் நடிப்பவர்கள் பற்றி பேசி கலகத்தை ஏற்படுத்தி விடுவார்.

அந்த வகையில் தற்போது பயில்வான் ரங்க நாதனின் வாய் சும்மா இருக்காமல் பிரபல நடிகையும் டாக்டருமான ஷர்மிளா குறித்து வெளியிட்ட வீடியோ பதிவானது கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷர்மிளாவிற்கு மூன்று புருஷன்கள்..

மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் டாக்டர் ஷர்மிளா. மருத்துவ படிப்பு படித்து இருக்கக்கூடிய இவர் மத்தியில் ஆளும் கட்சியின் மீது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் எது செய்தாலும் அதை எதிர்த்து வருகின்ற எதிர்ப்பாளராக விளங்குகிறார்.

இதனை அடுத்து ஜாதிகள் இல்லையடி பாப்பா.. குலத்தைப் பற்றி உயர்த்தியும் தாழ்த்தியும் சொல்வது பாவம் என்று பாரதி பாடியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவரைப் போலவே மனிதனும் நற்பண்பும் தான் ஒருவரை உயர்த்தும் என்ற கருத்தை வலியுறுத்த கூடியவர் டாக்டர் ஷர்மிளா.

அந்த வகையில் இவர் ட்விட்டரில் ஒரு முறை ஜாதி என்பது சமூக நீதியின் அடையாளமாக இருக்க வேண்டுமே ஒழிய வேறு எதற்கும் அல்ல என்பது போல ஜாதிக்கு உரிய விளக்கத்தை அளித்திருந்தார்.

மேலும் இவர் மறைந்த டாக்டர் மாத்ரு பூதத்துடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த புதிரா? புனிதமா? நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார்.

அந்தரங்கத்தை பிரித்து மேய்ந்த நடிகர்..

மேலும் செ*** கல்வி தேவை என்பதை வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் இது பற்றிய புரிதல் தமிழகத்தில் மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

அத்தோடு பாலியல் குற்றங்கள் இதனால் தான் அதிக அளவு ஏற்படுவதாக ஆய்வுகளில் தரவுகள் சொல்லி வருவதாக சொன்ன இவர் 20 வருடங்களுக்கு முன்பே இது தொடர்பான சந்தேகங்கள் பாலியல் நோய்கள் பற்றிய விளக்கங்களை டாக்டர் மாத்ரு பூதத்தோடு இணைந்து வழங்கியிருக்கிறார்.

பெருகும் மலிவான ரசனைகள்..

மேலும் நடிகை ஷர்மிளா ஒரு பெண் என்பதால் இது குறித்து நேயர்கள் கேள்விகளை இயல்பாகவும் வெளிப்படையாகவும் கேட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இந்த விஷயத்தை தான் தற்போது பயில்வான் அக்கு வேறு ஆணி வேராக பிரித்து ஒரு மிகப்பெரிய குறை இருப்பது போல பேசி இருக்கிறார். இதற்கு காரணம் அண்மையில் ஷர்மிளா youtube சேனலுக்கு பேட்டி எடுத்த போது அதில் பயில்வான் ரங்க நாதனை விமர்சனம் செய்திருக்கிறார்.

அந்த விமர்சனத்திற்கு பதிலடி தரக்கூடிய வகையில் ஷர்மிளாவிற்கு மூன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்தரங்கத்தை பற்றி பேசுவதாக சொல்லி இருக்கும் இவர் அறிமுகமானது புதிரா? புனிதமா ?என்ற அந்தரங்க நிகழ்ச்சியின் மூலம் தான் அப்படி இருக்கையில் என்னைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து ஷர்மிளா எத்தனை திருமணம் செய்து கொண்டால் என்ன அது ரங்கநாதனுக்கு தேவையில்லாத விஷயம். புதிரா? புனிதமா? நிகழ்ச்சியில் இரண்டு டாக்டர்கள் கலந்து கொண்டு நேயர்களுக்கு பதில் அளித்தது தவறா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.