டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிய ஜெயம் ரவி..! அதுக்காக வளைத்து போட்ட மாமியார்..! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

திரை உலக பின்புலத்தோடு நடிகராக அறிமுகம் ஆன ஜெயம் ரவியின் அப்பா ஒரு மிகச் சிறந்த எடிட்டராக விளங்குகிறார். மேலும் இவரது அண்ணன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களை இயக்கி வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவி..

தற்போது திரையுலக நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து விவகாரம் வைரலாக பரவியது.

சூடு அடங்கி முடிவதற்குள் தற்போது இணையங்களில் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர்களது விவாகரத்துக்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.

பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயம் ரவி பற்றி இது வரை எந்தவிதமான கிசுகிசுகளோ, வேறு விதமான விமர்சனங்களோ ஏற்படாத நிலையில் இவரது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று பலரும் புலம்பித் தவிக்கிறார்கள்.

டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய ஜெயம் ரவி..

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகைகளை ஓரம் கட்ட கூடிய வகையில் ஆர்த்தி அடிக்கடி தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு இருக்கின்ற புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவார்.

எப்படி இருவரும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப் பேசியது இணையங்களில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

வளைத்துப் போட்ட மாமியார்..

அந்த வகையில் கணவன் மனைவியாக இருக்கும் அனைவரும் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். அப்போது தான் எந்த விஷயமும் ஒரு சாதாரண விஷயமாக மாறுவதற்கான சூழ்நிலை அமையும்.

அந்த வகையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திகுடும்பமே நல்ல குடும்பம் தான். இவர்களை பற்றி இது வரை எந்த விதமான நெகட்டிவ் கமாண்டுகள் வந்ததில்லை.

இந்த சூழ்நிலையில் ஜெயம் ரவி தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது குறித்து ஆர்த்தி எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை.அவர் சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறார்.

பிரபலம் வெளியிட்ட தகவல்..

இந்நிலையில் ஜெயம் ரவி சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில் பார்க்க மிகவும் அழகாக இருந்ததை அடுத்து சூப்பர் ஸ்டார் மகளை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளி வந்தது.

எனினும் ஜெயம் ரவியை எப்படியாவது தன் மகளுக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக அவரது மாமியார் இருந்ததோடு மட்டுமல்லாமல் கட்டுக்கோப்பான குடும்பத்தில் வளர்ந்த ஜெயம் ரவியை தன் மகனுக்கு திருமணம் செய்து கொள்ள வளைத்துப் போட்டார்.

அது மட்டுமல்லாமல் தன் மருமகனை வைத்து பல படங்களை தயாரித்து இருக்கிறார். ரவிக்கும் மாமியார் மீது அதிக பாசம் மரியாதை உள்ளது. அது போலவே மாமியாரும் தன் மருமகன் மீது அக்கறையும் பாசமும் கொண்டவர் என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.