விஜய் திரிஷா தனிக்குடித்தனம்..! இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்த வருகிறார். இதனை அடுத்து தளபதி 69 படத்தில் நடித்த பிறகு முழு நேர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.

இவரைப் போலவே தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா தற்போது தல அஜித்தின் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் திரிஷா தனிக்குடித்தனம்..

தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா 10 ஆண்டுகளுக்கு முன்னதாக நடித்த கில்லி திரைப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி எப்படி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருந்ததோ அது போல அண்மையில் இவர்கள் இருவரின் நடிப்பில் வெளி வந்த லியோ படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி அன்று போல் இருந்தது என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவர் தளபதி விஜய்க்கு லிப் லாக் முத்தத்தை கொடுத்து ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிய விஷயங்களும் இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவை ரீதியான விமர்சனங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மேலும் தற்போது தளபதி விஜய் தனது மனைவி மகன் தாயாரை விட்டு தனித்து வசித்து வருவதாகவும் இவருக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் சம்திங் இருப்பதாக இணையங்களில் செய்திகள் வெகுவாக பரவி இருந்தது.

மேலும் அது குறித்து சில விஷயங்களை பாடகி சுசித்ரா அண்மையில் பகிர்ந்ததை அடுத்து அந்த வரிசையில் தற்போது திரிஷாவும் பேசப்பட்டு வருவதோடு தனி குடித்தனம் நடத்துவதாக அரசல் புரசலாக செய்திகள் இணையங்களில் வெளியாகி உள்ளது.

இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்..

மேலும் நடிகை திரிஷா நடிகர் விஜய் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில் இது குறித்து பேசிய பிரபல மருத்துவர் காந்தராஜ் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

 அவர் கூறியதாவது பொதுவாக நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போது இந்த படத்தின் கதை என்னுடையது என ஊர் பேர் தெரியாத ஒருவர் திடீரென வெளியே வந்து மீடியாக்களில் பேட்டி கொடுப்பார். 

இந்த செய்தி ஊடகங்களில் ஒரு பத்து நாளைக்கு பரபரப்பாக பேசப்படும். அதுவே படத்திற்கு ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படும். ஒருவர் வழக்கு போடும் அளவுக்கு இந்த கதையில் என்ன இருக்கிறது..? என்ற ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படும்.

இதுவே படத்தின் வசூலை அதிகரிக்கும். இப்படியே தன்னுடைய படங்கள் வெளியாகும் போது தெரிந்தோ, தெரியாமலோ நடிகர் விஜய் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி இருப்பதை பார்த்திருக்கிறோம். 

பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..

ஏன் அவரோ அல்லது சம்பந்தப்பட்ட குழுவோ கூட இப்படி ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கலாம். அது நமக்கு தெரியாது. 

ஆனால், தற்போது பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் வேறு ஒரு நடிகையுடன் ஊர் சுற்றுவது போலவும் ஒரு லிஃப்டில் இருப்பது போலவும் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டால் விஜயும் த்ரிஷாவும் தனி குடித்தனம் இருக்கிறார்கள் என்று கூட கூறுவார்கள்.

 அப்படி சொல்லிட்டு போகட்டும். அது விஜய்யை ஏதாவது பாதிக்கப் போகிறதா..? என்று கேட்டால் கிடையாது. அவ்வளவு ஏன் அவர்கள் இருவரும் தனி குடித்தனம் இருக்கிறார்கள்.. அது உண்மை தான் என்று தான் வைத்துக் கொள்வோமே.. இருந்து விட்டு போகட்டும்.

அதனால் யாருக்கு பாதிப்பு..? இப்படியான புகைப்படங்கள் வெளியாவதும் அதை சுற்றி சர்ச்சைகள் வருவதும் சினிமா பிரபலங்களுக்கு இது சாதாரண விஷயம். 

இதனை ஒரு பெரிய விஷயமாக பேசி நல்ல நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவதை நாம் தவற விட்டுவிடக்கூடாது என பேசியிருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.