நிக்கோலாய் ஆபத்தானவன்.. முதல் மனைவிக்கு செய்த கொடூரம்.. ஜாக்கிரதை.. வரலட்சுமியை எச்சரித்த பிரபலம்..!

மிழ் திரை உலகில் தனக்கு என்று எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான உழைப்பால் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவின் மகள் வரலட்சுமிக்கு அண்மையில் தாய்லாந்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் ஏற்கனவே நடிகர் விஷாலை காதலித்து வந்த நிலையில் விஷால் தனது தந்தையை மதிக்காமல் சில நகர்வுகளை நடிகர் சங்க தேர்தலில் செய்ததை அடுத்து தன் தந்தையை அவமானம் செய்த விஷாலுக்கு பதிலடி அளித்த கூடிய வகையில் தான் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை மனந்தார் என இணையங்களில் செய்திகள் வெளிவந்தது.

நிக்கோலாய் ஆபத்தானவன்..

மேலும் மும்பையில் சேர்ந்த நிக்கோலாய் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடி பில்டராகவும் விளங்குகிறார். இவர் தனது தந்தையினுடைய ஆர்ட் கேலரியை கவனித்து வருகிறார்.

இதனை அடுத்து நிக்கோலாய் மீது கொண்ட காதலை அடுத்து தனது பெற்றோர்களிடம் இதை தெரிவித்த வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது.

இந்த நிலையில் தற்போது இவர்களது திருமணம் பிரமாண்டமான முறையில் தாய்லாந்தில் நடந்ததை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து இந்த ஜோடியின் மண வாழ்க்கை மற்றும் நிக்கோலாய் குறித்து திரை ஆர்வலரான டாக்டர் காந்தராஜ் பேசியிருக்கும் விஷயங்கள் இணையத்தில் இருக்கும் இணையதள வாசிகளை மட்டுமல்லாமல் வெகுஜனங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்கு என்ன காரணம் அவர் என்ன சொல்லியதால் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதல் மனைவிக்கு செய்த கொடூரம்..

தற்போது 39 வயதுக்கு மேல் ஆகும் நடிகை வரலட்சுமியை இரண்டாம் தரமாக நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர். அத்தோடு அந்த தம்பதிகளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறார்.

இதனை அடுத்து ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் திருமணத்தை முடித்துவிட்டு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அவர்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கினார்கள்.

இந்த சூழ்நிலையில் டாக்டர் காந்தராஜ் அளூத்த பேட்டியில் நிக்கோலாய் ஆபத்தானவராக இருக்கலாம். ஏனென்றால் முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்ததாலும் பல பெண்களோடு தொடர்பில் இருந்ததாலும் விவாகரத்து பெற்று இருக்கலாம்.

வரலட்சுமி எச்சரித்த பிரபலம்..

அத்துடன் இந்த திருமணத்திற்கு சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்குக் காரணம் ஒரு வேளை சாயாதேவியை வரலட்சுமி சரியான வகையில் நடத்தாமல் இருந்திருக்கலாம்.

அத்தோடு 39 வயது கடந்த நிலையில் வரலட்சுமி நிக்கோலை திருமணம் செய்து கொண்டிருப்பது ஒரு லேட் மேரேஜ் இதனால் இவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இவர்களது திருமணம் இந்தியாவில் நடந்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் தாய்லாந்தில் நடத்தி இருக்கலாம்.

எனவே இதையெல்லாம் தொடர்பு படுத்தி பார்க்கும் போது வரலட்சுமி சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் அவரது அனுமானங்களை வெளியிட்டு அனைவரையும் பீதியில் ஆழ்த்தி இருக்கக் கூடிய நிலையில் இவர் தேவையில்லாமல் என்ற விஷயத்தை தலையிட்டு யூகங்களை வெளியிடுவது தவறு என்று பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.