நாலு பேருக்கு நடுவில் உடயை கழட்டி இதை பண்ணேன்.. எல்லாம் அது தான்.. கூச்சமின்றி கூறிய குஷ்பூ..!

தமிழ் திரையுலகில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். 90-களில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

நடிகை குஷ்பூ நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் செயல்படக் கூடிய இவர் சின்ன திரையிலும் அடிக்கடி தலைகாட்டி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆறு பேருக்கு நடுவில் உடையை கழட்டி.. 

தமிழ் திரைப்பட உலகை பொருத்த வரை நடிகை குஷ்பூ 1989-ஆம் ஆண்டு வெளி வந்த வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் . மேலும் இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இவர் நடிப்பில் வெளி வந்த நாட்டாமை, அண்ணாமலை, சின்னத்தம்பி உள்ளிட்ட பல படங்கள்  வெற்றி நடை போட்டதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் கமலஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கும் நடிகை குஷ்பூ பெரியார் வாழ்க்கை வரலாறு படத்தில் மணியம்மையாக நடித்திருக்கிறார்.

நடிகர் பிரபுவோடு பல படங்களில் இணைந்து நடித்த இவரை பற்றி கிசுகிசுக்கள் அதிகளவு வெளி வந்த போதும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டின் மருமகளாக மாறினார்.

இதை பண்ணினேன்..

சமூக வலைத்தளங்களிலும் படு அக்டிவாக இருக்கக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்று இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது. இதில் இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்கொண்ட சில விஷயங்கள் பற்றி விரிவாக பேசியிருக்க கூடிய நடிகை குஷ்பூ அந்த காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடை மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அவர் சந்தித்த இடையூறுகள் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தற்போது இருக்கக் கூடிய கேரவன் வசதி அந்த காலத்தில் இல்லை என்பதால் உடை மாற்றுவது என்பது சவால் நிறைந்த ஒன்றாகவே கருதப்பட்டது. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு தயாராக உடைகளை மாற்ற வேண்டும் என்றால் நம்முடன் இரண்டு லைக்மென்களையும் இரண்டு ஒப்பனைக் கலைஞர்களை மட்டுமே அனுப்புவார்கள்.

கூச்சமின்றி கூறிய குஷ்பூ..

இவர்கள் நால்வரும் கையில் ஒரு பெரிய துணியை வைத்து என்னை மறைத்துக் கொள்வார்கள். நான் உள்ளே சென்று உடைகளை உடனே மாற்றிவிட வேண்டும். எனவே என்னை சுற்றி எப்போதும் நாலு பேர் இருந்தாலும் எனக்கு பயம் ஏற்படாத வகையில் அவர்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அவர்கள் கொடுத்த நம்பிக்கையோடு மட்டும் அல்ல அன்று செல்போன் ஏதும் கிடையாது என்பதால் பயம் இல்லாமல் உடையை மாற்றிவிடலாம். ஆனால் தற்போது பயம் அதிகமாக உள்ளது.

சில சமயங்களில் அம்பாசிடர் காருக்குள் அமர்ந்தெல்லாம் உடை மாற்றி இருக்கிறேன்ஶ்ரீ இந்த கார் முற்றிலும் துணி போட்டு மூடப்பட்டு இருக்கும்.மேலும் காருக்கு வெளியே டிரைவர் நின்று கொண்டு இருப்பார். அவர் அந்த வழியாக வருபவர்களை அங்கு வராமல் பார்த்துக் கொள்வார்.

இதனை தொடர்ந்து இப்படி உடைமாற்றத்தால் பல திரைப்படங்களில் நடித்தேன். ஆனால் இன்று கேரவன் இருந்தாலும் அந்த காலத்தில் இருந்த நம்பிக்கை கிடைக்குமா? என்பது சந்தேகம் என்று பேசியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு நாலு பேருக்கு நடுவில் உடையை கழற்றி மாற்றிய அனுபவத்தை கூச்சமின்றி கூறிய குஷ்புவின் வார்த்தைகளில் உண்மை உள்ளது என்று சொல்லலாம்.