கசமுசா காட்சிகளை பார்த்து என் அம்மா இதை பண்ணுவாங்க.. மானத்தை வாங்கிய நடிகை ஐஸ்வர்யா..!

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் இருந்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நடிகை லட்சுமி. இவரது மகளான ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது அம்மாவின் பிரபலத்தை பயன்படுத்தி அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்தார் ஐஸ்வர்யா.

அதற்கு பிறகு அவருக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறலாம் ஏனெனில் அவரது அம்மாவான லெஷ்மி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று  பல படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இந்திய அளவிலேயே நடிகை லட்சுமிக்கு வரவேற்பு இருந்தது.

முதலில் தெலுங்கு சினிமாவில்தான் அறிமுகமானார் ஐஸ்வர்யா. தெலுங்கில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு கன்னடம் மலையாளம் தெலுங்கு தமிழ் என்று வரிசையாக அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் வரவேற்பு:

தமிழில் முதன் முதலாக நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்கிற திரைப்படத்தில் நடித்தார். 1990களில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் என்றாலும் 1992ல் வந்த ராசுகுட்டி திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இருந்த அதிக இரட்டை வசனங்கள் வெகுவாக பேசப்பட்டது தொடர்ந்து அவருக்கு தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

அதே சமயம் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதற்குப் பிறகு சில வருடங்களுக்குப் பிறகு அம்மா கதாபாத்திரத்திலும் அக்கா கதாபாத்திரத்திலும் நடிப்பதற்குதான் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது.

தொடர்ந்து படங்கள்:

வயதான பிறகும் கூட நிறைய முக்கிய நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை லட்சுமி. அவற்றில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, வேல், குத்து மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் முக்கியமான திரைப்படங்கள் என்று கூறலாம்.

இந்த நிலையில் அவருடைய சிறு வயது வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் கூறும் பொழுது எனது அம்மா எங்களுக்கு அதிகமான திரைப்படங்களை எல்லாம் காட்டி வளர்த்தது கிடையாது.

குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களை பார்ப்பதற்கு மட்டும்தான் எங்களுக்கு அனுமதி உண்டு. அப்படியான திரைப்படங்களை நாங்கள் பார்க்கும்போதும் கூட எனது அம்மா எங்களுடன் சேர்ந்துதான் அமர்ந்திருப்பார். அதிகமான கவர்ச்சி காட்சிகள் கொண்ட திரைப்படங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இரண்டு மூன்று திரைப்படங்களைதான் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருப்போம்.

அந்த திரைப்படங்களிலும் கூட தப்பி தவறி ஏதாவது கவர்ச்சி காட்சிகள் முத்த காட்சிகளோ வந்துவிட்டால் உடனே எங்களை திரும்ப சொல்லி விடுவார். எங்களது தாயார் பிறகு அந்த காட்சிகளை ஓட்டிவிட்டு அதற்கு பிறகுதான் திரைப்படத்தை பார்ப்பதற்கு அனுமதிப்பார் என்று கூறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா.