வரலட்சுமியின் கணவருக்கு இவ்ளோ சொத்தா.. கோடிகளை நம்பி நடக்கும் திருமணம்.. ஆனால்.. சரத்குமார்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மனைவி சாயாதேவிக்கு பிறந்த வரலட்சுமி தென்னிந்திய திரை உலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து இவரது திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் சென்னையில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

வரலட்சுமி திருமணம்..

தமிழ் திரை உலகில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி மும்பையை சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இவரது அப்பா சரத்குமார் திருமணம் செய்து கொண்ட ராதிகா மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர்.நடிகர் சரத்குமாருக்கும் இந்த திருமணம் இரண்டாவது திருமணம் தான்.

சரத்குமார் குடும்பத்தை பொருத்த வரை திருமணம் என்பது பணத்தால் முடிவு செய்யப்படுகிறது என்பது அப்பட்டமாக உங்களுக்கு புரிந்து இருக்கும். அந்த வகையில் செல்வந்தரான நிக்கோலாயை வரலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே திருமணம் நடந்து 16 வயதில் ஒரு பெண் இருக்கின்ற சமயத்தில் வரு இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டுவிட்டார்.

இந்த நிலையில் வரலட்சுமி திருமணத்திற்கு சாயா தேவியோ அல்லது பத்திரிக்கையை கொடுப்பதற்கு குறிப்பாக பிரதமரிடம் பத்திரிக்கை கொடுக்க சாயாதேவி செல்லவில்லை.

மேலும் சொந்தத் தாயை மதிக்காமல் இருந்தாரா வரலட்சுமி இந்த கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த திருமணத்தில் அனைத்து செலவுகளையும் நிக்கோலாய் தான் செய்திருக்கிறார்.

 மாறாக தனது சொந்த மகளுக்கு என எந்த ஒரு சீர்வரிசையும் செய்யாத சரத்குமார் பற்றி ஊடகங்கள் பல்வேறு கருத்துக்களை சொல்லி வருகிறது.

கோடிகளை நம்பி.. அட இவ்வளவு சொத்து..

ராதிகாவிடம் எவ்வளவு பணம் உள்ளது சரத்குமார் இடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பெரிய விஷயம் இல்லை. இவர்கள் அனைவருக்கும் திருமணத்தின் மூலம் பணம் கிடைக்கிறது என்பது தான் முக்கியமான விஷயம்.

அது மட்டுமல்லாமல் ராதிகாவை எடுத்துக் கொண்டால் பிரதாப் போத்தன் இலங்கையைச் சேர்ந்த ரிச்சர்ட் என இருவரை டிவோஸ் செய்து இருக்கிறார்.

அப்படி செய்யும் போது ஜீவனாம்சம் வாங்காமல் இருந்திருப்பாரா என்ற கேள்வியை ஜெய்சங்கர் ரீசன்ட் வாய்ஸில் பேசும் போது முன் வைத்திருக்கிறார்.

வயது எல்லாம் பார்க்க மாட்டார்கள். பணம் இருந்தால் போதும் திருமணம் என்ற மனோபாவத்தில் செயல்படக் கூடிய இந்த நடிகைகள் சாதாரண மனிதர்களை விரும்பி திருமணம் செய்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்.

ஆனால் சரத்குமார்..

மேலும் சினிமாத்துறையில் இருக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகளை பொருத்த வரை காதலித்து திருமணம் செய்து கொள்வது வாழ்க்கை நீடித்து நிலைப்பதில்லை என்று சொல்லி இருக்கக்கூடிய இவர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மருதாணி வைக்கக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வை மெஹந்தி கொண்டாட்டமாக பல கோடிகளை செலவு செய்து குத்தாட்டம் போட்டு விளம்பரப்படுத்தி இருப்பதை பார்த்து இந்த திருமணம் நிலைத்து இருந்தால் சந்தோசம் தான் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

மேலும் நடிகர் சங்க விவகாரத்தில் நடந்த அவமானங்களை அடுத்து தான் நடிகர் விஷாலை வரலட்சுமி பிரேக் அப் செய்தார். எனினும் நடந்து முடிந்த திருமணத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் என்பது போன்ற தகவலும் வெளியானது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் இவர்கள் எல்லாம் ஒரு மனிதர்களா என்று கேட்கத் தோன்றும். இப்போது இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.