விடாமல் மூணு தடவை.. ஸ்ரீவித்யாவை நாசமாக்கிய நடிகர்கள்.. பலரும் அறியாத உண்மை தகவல்கள்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீவித்யா கர்நாடக இசை பாடகி எம் எல் வசந்தகுமாரி-யின் மகள் ஆவார். 80 காலகட்டங்களில் இருந்து 90 காலகட்டம் வரை ஸ்ரீவித்யாவை பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.

தனக்குள் இருந்த அவ்வளவு வேதனைகளையும் ஒரு பக்கம் மறைத்து சிரித்த முகத்தோடு காட்சி அளித்த நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி பக்கங்கள் பற்றி தற்போது தகவல்கள் வெளி வந்துள்ளது.

நடிகை ஸ்ரீவித்யா..

நடிகை ஸ்ரீவித்யாவை பற்றி கமலஹாசன் சில வருடங்களுக்கு முன்பு பேசி இருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதற்கு ஸ்ரீவித்யாவை பற்றி அவரது நெருங்கிய உறவினரான அவரது அண்ணி சில தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் கமலஹாசனும் ஸ்ரீவித்யாவும் காதலித்தது உண்மை தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டதோடு அவர்களுக்கு ஏன் திருமணம் நடக்கவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார்.

கமலஹாசன் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் அது பற்றி பேசிய நிலையில் அப்படி திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவர் சொன்னதை அடுத்து கோபப்பட்டு அங்கிருந்து வெளியே சென்று கமல் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ஸ்ரீவித்யா கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஒரு தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டுதான் பல சினிமாவில் பிஸியாக நடித்திருக்கிறார்.

விடாமல் மூன்று தடவை..

அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்ற பிரபல சினிமாகாரரை சந்தித்ததை அடுத்து அவரது குணாதிசயம் ஸ்ரீவித்யாவிற்கு பிடித்துப் போக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் ஜார்ஜுக்காக ஞானஸ்தானம் பெற்று அவர்களது சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வாழ ஆரம்பித்தார்.

அத்தோடு ஸ்ரீவித்யாவிற்கு திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இவ்வளவு நாட்களாக ஓடியோடி உழைத்த அவர் இனி ரெஸ்ட் எடுக்க வேண்டும். வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக ஜார்ஜ் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்.

எனினும் அதைப் பற்றி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஸ்ரீவித்யா ஏற்கனவே காதலில் பட்ட வேதனை போதாது தற்போது திருமணம் ஆகி சந்தோஷமாக இல்லை என்று தெரிந்தால் சரி வராது என்று மேலும் பிரச்சனைகள் வரக்கூடாது என்று ஜார்ஜ் சொன்னபடி ஆடி வந்தார்.

அந்த சமயத்தில் ஸ்ரீவித்யா கர்ப்பமாக இருந்த போது ஜார்ஜ் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார். இந்த கருகலைப்பு ஒரு முறையல்ல மூன்று முறை நடந்துள்ளது.

அத்துடன் கருக்கலைப்பு செய்ய விருப்பம் இல்லாத ஸ்ரீவித்யா மருத்துவமனையில் கூட அழுது இருக்கிறார் என்ற உண்மையை அவரது அண்ணி வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.

பலரும் அறியாத உண்மை தகவல்கள்..

இதனால் மனம் உடைந்து மனோரீதியாக பாதிப்புகளுக்கு உள்ளாகிய ஸ்ரீவித்யா குழந்தைகளோடு வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற கனவு தவிடு பொடி ஆனதை அடுத்து நிம்மதி இல்லாமல் இருந்திருக்கிறார்.

மேலும் தன்னை ஒரு பணம் காய்க்கும் மரம் போல ஜார்ஜ் நடத்தியது அவருக்கு சற்றும் பிடிக்காமல் ஒரு கட்டத்தில் கோபம் ஏற்பட ஜான்ஸை விட்டு பிரிய முடிவெடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தனது மொத்த சம்பாத்திய சொத்துக்கள் அனைத்தும் ஜார்ஜ் வசம் இருக்க அதை மீட்டெடுக்க  நீதிமன்றம் வரை சென்று போராடியதோடு 1980 இல் ஜார்ஜிடமிருந்து விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வந்தார்.

இதனை அடுத்து புற்றுநோயால் மரணம் அடைந்த ஶ்ரீவித்யா தனது சொத்துக்கள் அனைத்தையும் ஆதரவாற்றவர்களுக்கும் ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவி தொகையாக வழங்கியதொரு நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி செய்ய உயில் எழுதி வைத்திருக்கிறார்.