பிரியா பவானி ஷங்கர் ரகசிய திருமணம்..! கலங்கி நின்ற நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

சின்ன திரையில் அறிமுகமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கரை பொருத்தவரையில் மிகவும் அடக்கம் ஒடுக்கமான உடையில் பெரிதாக கவர்ச்சி எதுவும் காட்டாமல் நடிக்க கூடியவர் என்று கூறலாம்.

இருந்தாலும் கூட அவருக்கென்று பெரும் ரசிக்கப்பட்டாளத்தை அவர் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் ப்ரியா பவானி சங்கர். தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களையும் அப்போது பேட்டி எடுத்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக பயணம்:

அதேபோல செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். இதற்கு நடுவேதான் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்தது. அதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சீரியல்களில் ஓரளவு வரவேற்பு கிடைத்ததை அடுத்து மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது ஏனெனில் அந்த படத்தின் கதை ஒட்டுமொத்தமாக கதாநாயகியை சுற்றி செல்லும் கதை அமைப்பை கொண்ட திரைப்படமாகும். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் பிரியா பவானி சங்கர்.

திரைத்துறைக்கு வந்த பிறகு பிரியா பவானி சங்கருக்கு நிறைய காதல் கோரிக்கைகள் வந்தன. அவரை திருமணம் செய்து கொள்ள பல பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் ஆர்வமாய் இருந்தனர். ஆனால் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களிலேயே பிரியா பவானி சங்கர் ஒருவரை காதலித்து வந்தார்.

கல்லூரி காதல்:

அவரைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தும் இருக்கிறார். பெரும்பாலும் கதாநாயகி ஆன பிறகு பெண்கள் அதிகபட்சம் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அல்லது நடிகர்களைதான் திருமணம் செய்வார்கள்.

ஆனால் பிரியா பவானி சங்கர் அப்படி எல்லாம் இல்லாமல் காசு பணம் எதுவும் பார்க்காமல் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யும் நோக்குடன் இருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் திருமணம் செய்து கொண்டால் வாய்ப்புகள் குறைந்து விடும் என்பதால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்.

இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய காதலனுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். ரத்தினம் திரைப்படம் வெளியான பொழுதும் இப்படிதான் அவர் காதலருடன் சுற்றுலா சென்ற காரணத்தினால் அந்த படத்தின் ப்ரமோஷனுக்கு அவர் வரவில்லை.

அதேபோல தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்கும் பிரியா பவானி சங்கர் வரவில்லை. தன்னுடைய காதலனுடன் இப்பொழுது வெளிநாட்டுக்கு போய்விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் குறித்து எதிர்மறை கருத்துக்கள் சினிமாவில் நிலவ துவங்கியிருக்கின்றன.

அவர் தன்னுடைய காதலுருடன் வெளிநாட்டில் ரகசியமாக குடும்பே நடத்த துவங்கிவிட்டார் என இந்த விஷயம் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.