நைட் பார்ட்டியில் கவர்ச்சி குதிரையாக துள்ளும் கார்த்திகா நாயர்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

எல்லா நடிகைகளுக்குமே தமிழ் சினிமாவில் வந்த உடனேயே பெரிய வரவேற்பு என்பது கிடைத்து விடுவதில்லை. சில நடிகைகளுக்கு மட்டுமே அப்படியான வரவேற்புகள் கிடைக்கும்.

பல நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்பு என்பதே கிடைக்க துவங்கும். சில படங்களுக்கு பிறகு அவர்கள் மக்களால் அறியப்படும் நடிகைகளாக இருப்பார்கள்.

நடிகைகள் வளர்ச்சி:

அதற்கு பிறகுதான் சினிமாவில் அவர்களுக்கு வளர்ச்சி என்பதே இருக்கும் ஆனால் தமன்னா மாதிரியான ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களிலேயே பெரிய வரவேற்பை பெறுவார்கள். அப்படி வரவேற்பை பெறும் நடிகைகள் அதை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நல்ல நல்ல கதைகளில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான இடத்தை தாக்க வைத்துக் கொள்கின்றனர்.

ஆனால் அப்படியான இடம் கிடைத்தும் கூட அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாத நடிகையாகதான் நடிகை கார்த்திகா நாயர் இருக்கிறார். தமிழில் இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கார்த்திகா நாயர்.

அந்த முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தின் திரைக்கதையுமே சிறப்பாக இருந்தது என்றாலும் கூட அந்த திரைப்படத்தில் நடித்த பிறகு பெரிதாக வரவேற்பு பெறாமல் போன ஒரு நடிகையாகதான் கார்த்திகா நாயர் இருக்கிறார்.

தமிழில் முதல் படம்:

கோ திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் அவர் நிறைய தவறு செய்த காரணத்தினால் அவருக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.

அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து விலகினார் நடிகை கார்த்திகா நாயர். இப்பொழுது பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் என்பதே இல்லை என்று கூறலாம். ஆனால் அதே சமயம் சினிமாவை விட்டு இவர் மொத்தமாக விலகிவிடவில்லை.

சினிமா பிரபலங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் கார்த்திகாம் நாயர். திரும்பவும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்கலாம் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். ஏனெனில் இவர் சினிமாவில் வலம் வந்த காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நடிகை கார்த்திகா நாயர்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்களுடன் அவர் சமீபத்தில் பார்ட்டி ஒன்றிற்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றை பார்க்கும் பொழுது இன்னுமும் நடிகை ஆவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.